Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

'ஓசோன்' வாசம் எனக்கு பிடிக்கலை

துரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்சம்.


"என்னப்பா, இப்படி ஒரு வாடை அடிக்கிறதே?!" என்று என் மகன் கேட்டான்.

"இதுதான் ஓசோன் வாசம்..!" என்றேன்.

அவனால் நம்பமுடியவில்லை.

"போங்கப்பா, ஓசோன் நமக்கு எவ்வளவு நன்மை செய்கிறது. அது போய் இப்படி நாத்தம் அடிக்குமா..?"

நல்லவற்றில் நல்ல மணம்தான் வரும் என்பது அவன் நம்பிக்கை.

"ஓசோன் வெறும் நன்மையை மட்டுமே செய்யவில்லை. அது தீமையையும் செய்கிறது..!" என்றேன்.

நான் சொல்ல சொல்ல அவன் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தன. ஏனென்றால், ஓசோன் ஒரு நல்ல வாயு என்று மட்டுமே அவனுக்கு போதிக்கப் பட்டிருந்தது.

சூரிய ஒளியில் இருந்து வெளிப்படக்கூடிய, தீங்கு செய்யும் 'அல்ட்ரா வைலட் ரேஸ்'-யை கட்டுப்படுத்தி, நல்ல கதிர்களை மட்டும் நமக்கு வழங்கும் வேலையைத்தான் ஓசோன் செய்கிறது.  மனிதனுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய புற ஊதா கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் இயற்கை 'பில்டர்'தான் ஓசோன்.


'ஓசோன்' ஒரு வாயு. இளநீல வண்ணம் கொண்டது. இதன் மூலக்கூறில் மூன்று ஆக்சிஜன் அணுக்கள் இருக்கின்றன. கிரேக்க மொழியில் 'ஓசோன்' என்றால் வாசம் என்று பொருள்.

லேசான மீன் வாடை கொண்டது. ஓசோன் இடி மின்னலுடன் கூடிய காற்று வீசும் போது மீன் வாடையை நுகரமுடியும். அதுதான் ஓசோனின் மணம். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போதும் இதை உணர முடியும்.

ஓசோன் நன்மையையும் செய்யும். தீமையையும் செய்யும். ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும். மனிதர்கள், விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும். சில தாவரங்கள் கருகிப் போகும்.

இதே ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களை தடுத்து. பூமிக்குள் ஊடுருவாமல் தடுத்து விடும். கடல் மட்டத்திலிருந்து 13 முதல் 20 கிலோ மீட்டர் வரையிலான உயரத்தில் ஓசோன் படலம் படர்ந்திருக்கிறது.

சூரியனில் இருந்து வெளியேறும் அதிக அளவு அலைவரிசை உள்ள 'அல்ட்ரா வயலட்' கதிர்களில் 97 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை ஓசோன் படலம் உறிஞ்சிக்கொள்வதால், அந்த கதிர்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்கிறது.

பூமியில் ஓசோன் வாயுவின் அளவு குளிர்கலங்களில் சற்றே அதிகமாக இருக்கும். அதிலும் மார்கழி மாதத்தில் மிக அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

அதிகாலையில் கோலம் போடும் பெண்களும், நடைபயிற்சி மேற்கொள்பவர்களும் இதை கருத்தில் கொள்வது நல்லது. இல்லையென்றால் நுரையிரலின் கொள்ளவை குறைப்பது, நெஞ்சுவலி, தொண்டைக்கரகரப்பு, இருமல் போன்றவை இதன் பாதிப்பால் வரும்.

சி.எப்.சி.எனப்படும் 'ப்ளோரோ கார்பன்' மற்றும் பி.எம்.சி. எனப்படும் 'ப்ரோமொப்ளுரோ கார்பன்' ஆகிய வேதிப் பொருட்களுடன் புற ஊதா கதிர்கள் வினைபுரியும் போது குளோரின் மற்றும் புரோமின் வாயுக்கள் தனியே வெளியிடப்படகின்றன.

இந்த வாயுக்களின் ஒரு மூலக்கூறு ஓசோன் வாயுவின் ஒரு லட்சம் மூலக்கூறுகளை சிதைக்கின்றன. அப்போது ஏற்படும் இடைவெளிகள் மூலம் உறிஞ்சப்படாத புறஊதா பூமியில் நுழைகின்றன. இதைதான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுகிறது என்கிறார்கள்.

பத்தாண்டுகளுக்கு 4 % ஓசோன் படலம் குறைகிறது. இதற்கு 76 % மனிதர்களின் செயல்பாடுகள்தான் காரணம். இததான் பெரும் கொடுமை. ஒரு சதவீதம் ஓசோன் குறைந்தால் 1 முதல் 1.5 லட்சம் கண்பார்வை இழப்பு ஏற்படும். தாவரங்களின் டி.என்.எ. பாதிக்கப்படும். உணவு உற்பத்தி குறையும், ஒளிசேர்க்கை பாதிக்கப்படும். மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படும், நோயெதிர்ப்பு சக்தி குறையும், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.

அதனால் குலோரோப்ளுரோ கார்பன் கலந்துள்ள பூச்சிகொல்லிகள் மற்றும் ஸ்பிரெக்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். ப்ரோமோ மீத்தேன் கலந்த ரசாயன இடு பொருட்களை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது.

மோட்டார் வாகனங்களை குறைத்து கொள்ள வேண்டும். சைக்கிளில் செல்வது, நடந்து போவது உடலுக்கு நல்லது. ஒசோனுக்கும் நல்லது. ஏர் கண்டிஷனர், பிரிட்ஜ் போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்தால் ஓசோன் ஓட்டை விழுவதை தடுக்கலாம்.

இப்படி நீண்ட விளக்கத்தோடு 'தினத்தந்தி'க்கு நான் எழுதிய ஓசோன் கட்டுரையை வாசித்துக் காட்டினேன். பிரமிப்போடு கேட்டவன், "ஆனாலும் ஓசோன் வாசம் எனக்கு பிடிக்கவேயில்லை" என்று கூறி ஓடிவிட்டான்.

அந்த மழையின் குளிர்காற்றில் ஓசோனின் மணம் இன்னும் கலந்தே இருந்தது.

===

22 கருத்துகள்

  1. அருமையான கருத்தினை பகிர்ந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. எளிதாகப் புரியும் வகையில் நீங்கள் தரும் தகவல் சூப்பர்!

    குடைக்குள் பூனைகள் அதைவிட சூப்பர்:-)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள்,

      வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி!

      நீக்கு
  3. சொல்லப்பட்ட பயன்பாடுகள் அதிகமாகிக் கொண்டு வருவது தான் ஆபத்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயமாக மனிதனின் அழிவுக்கு மனிதனே காரணமாகிறான். மனிதனின் வாழ்வுக்கும் வசதிக்கும் இயற்கையை சேதப்படுத்துகிறான்.
      இயற்கையின் பதிலடி மனிதனால் தாங்கமுடியாதாக இருக்கும்.

      நன்றி தனபாலன் சார்!

      நீக்கு
  4. படித்தேன்! முதலில் மதிப்பெண் போட்ட பின்பே எழுதுகிறேன் காரணம் ,இப்பதிவு அருமையான , அனைவரும் அறிய வேண்டிய முக்கிய செய்தி கொண்டது விரிவாகவும் விளக்கமாகவும் தந்துள்ள தங்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா,

      தங்களின் வருகைக்கும் வாக்களித்து கருத்து பதிவிட்டதற்கும் நன்றி!

      நீக்கு
  5. அறிய பதிவு பல நல்ல தகவல்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன்

      நீக்கு
  6. நான் கவனித்த வரையில் நீண்ட நாளைக்குப் பிறகு பதிவுலகில் தேவையான விசயங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக நல்ல தகவல் அடங்கியப் பதிவு.....நண்பர் ஜோதிஜி அவர்களின் கருத்தையும் வழி மொழிகின்றோம்...

    குடைக்குள் பூனைகள் அருமை அருமை! அழகு! பூனைகள்: யப்பா என்னவோ ஓசோன் ஓட்டை விழுதாமே...இந்த மனுசங்க பண்ற அட்டூழியத்துனால....மனுசங்க ரொம்ப மோசம்..ம்ம் பாத்துக்க வெயில் அடிச்சா நாம குடைக்குக் கீழயே இருப்போம்....ஏனா நம்ம வீட்டுல இருக்கறவங்க மட்டும் இல்ல, நாம திங்கற மீனுங்க கூட பாதிக்கப்படுதாம்...ஆடு மாடுங்கலாம் கூட வெயில்ல அலையுதுங்க ல்லா பாவம்....ம்ம்ம் இதப் பத்தி இங்க பேசினா நீ....ண்டு போகும்...அதான் ஐயா எங்களையும் கொஞ்சம் கண்டுகிட்டு நீங்க இல்ல தில்லை அகத்துக்காரங்க யாராவ்து எழுதுங்க.....நன்றிங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை படிக்க படிக்க இனிமை கூடுகிறது நண்பர்களே!
      மிக்க நன்றி!

      நீக்கு
  8. நல்லதொரு சமூக நலன் வேண்டி தந்த தகவல் களஞ்சியம் அருமை நண்பரே,,,,
    தமிழ் மணம் 88

    பதிலளிநீக்கு
  9. இதுக்கே இந்த நாற்றம் அடிக்குதே ,பெரிய ஓட்டையானா இன்னொரு 'போபால் 'விபத்தே ஏற்படும் போலிருக்கே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்ஜி வரும்போதே சிரிப்பு மழையையும் கூட்டிக்கொண்டு வந்து விடுகிறார்.
      வருகைக்கும் வாக்கு பதிவுக்கும் நன்றி!

      நீக்கு
  10. அறியாத தகவல்களை அழகாய் பதிவிட்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. நான் கூட இந்த நாற்றத்தை உணர்ந்திருக்கேன் அதற்கான அறிவியல் காரணம் இன்றே தெரிந்தது. மக்கள் என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க. அதனால கண்டுபிடிப்புகளை தடை செய்யனும். இயற்கையை சேதப்படுத்தும ;கண்டு பிடிப்புகளை கட்டுபடுத்தனும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை