Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எனது நூறாவது பதிவு

"யப்பா..!" 

திரும்பிப் பார்க்கிறேன். நேற்றுதான் பதிவெழுத தொடங்கியது போல் இருக்கிறது. அதற்குள் நூறு பதிவுகளை தொட்டுவிட்டேன். இப்படியொரு பதிவுலகம் இயங்கிகொண்டிருப்பதே எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு 15 வருடங்களுக்கு முன்பே இதை தொடங்கியிருப்பேன்.

2006-ல் ஏதோவொரு ஆர்வத்தில் ப்ளாகை தொடங்கிவிட்டேன். ஆனால் அதில் எப்படி 'போஸ்ட்' செய்வது? என்று தெரியவில்லை. தமிழில் டைப் அடிப்பதும் சிரமமாக இருந்தது. அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். பின் மறந்தும் விட்டேன்.

கடந்த வருடம் எங்களது சுற்றுலா பத்திரிகையில் உணவு சம்பந்தமாக ஒரு தொடர் எழுதச் சொல்லி நண்பர் சுரேஷ் குமாரை தொடர்பு கொண்டேன். அப்போதுதான் அவர் ஒரு பிரபலமான வலைப்பதிவர் என்பது எனக்கு தெரிய வந்தது. 'கடல் பயணங்கள்' என்ற பெயரில் அவர் எழுதிவரும் பதிவுகளை பார்த்த போது மீண்டும் பதிவெழுதும் ஆர்வம் துளிர் விட்டது.

நான் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை சேமித்து வைக்க வேண்டும் என்பதுதான் அப்போது எனக்கு இருந்த ஒரே ஆர்வம். அதற்கு ப்ளாக் சிறந்த இடமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் 2014, நவம்பர் மாதம் 6-ம் தேதி, எனது முதல் பதிவை பதிவிட்டேன். 'தெற்கேயும் ஒரு எல்லோரா' என்ற கட்டுரைதான் நான் முதன் முதலில் எழுதியது. அதை மொத்தமே ஒரு 50 பேர்தான் பார்த்திருப்பார்கள். அதில் ஒருவர் எனது நண்பர் காரைக்குடி மக்கள் மன்ற தலைவர் ராஜ்குமார், அவர் மிகுந்த ஊக்கம் அளித்தார். வலைப்பதிவு மூலம் உங்கள் எழுத்துக்களை உலகம் முழுவதும் படிக்கலாம் என்றார். அவர் மட்டும்தான் அந்த பதிவில் கருத்திட்டார்.

ஆரம்பத்தில் ஆன்மிகம் சம்பந்தமாக நான் எழுதிய ஒரு தொடரில் இருந்து சித்தர்களைப் பற்றிய பதிவுகளையே வெளியிட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நண்பர் ஒருவரின் வலைப்பதிவில் 'தமிழ்மணம்' குறித்து தெரிந்துக் கொண்டேன்.அதில் இணைய எனது முகவரி கொடுத்து காத்திருந்தேன். நான்கு மாதங்கள் ஆகியும் எந்த ஒரு பதிலும் இல்லை.

கிட்டத்தட்ட தமிழ்மணத்தை மறந்தே போயிருந்தேன். திடீரென்று ஒருநாள் எனது பதிவில் திண்டுக்கல் தனபாலன் என்ற பெயரில் கருத்துரை இடப்பட்டிருந்தது. தொடர்ந்து எனது பதிவுகளில் அவரது கருத்துக்கள் தவறாமல் இடம்பெற்றன. அப்போது அவர் வலையுலகின் ஜாம்பவான் என்பது எனக்கு தெரியாது.

எனது பதிவுகளின் பார்வையாளர்கள் எண்ணிக்கை மடமடவென்று கூடத்தொடங்கியது. பின்னர்தான் தெரிந்தது தமிழ்மணத்தில் எனது வலைத்தளமும் இணைந்துவிட்டது என்பது. அப்போதுதான் தேவகோட்டை கில்லர்ஜியின் அறிமுகமும் கிடைத்தது. அவர் ஓட்டுப் பெட்டியை இணையுங்கள் என்றார். அதற்கு 'டாட் இன்' என்ற முகவரியை 'டாட் காம்' என்று மாற்றினால்தான் முடியும் என்று சொன்னார்கள்.

மாற்றியும் இணைக்க முடியவில்லை. அந்த இணைப்பை தனபாலன் அவர்கள்தான் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்போது கருத்துரையில் செய்த சில மாற்றங்களால் எனது முந்தைய பதிவுகளில் இருந்த கருத்துரைகள் எல்லாம் மறைந்து போனது. கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் காணமல் போனதுதான் இந்த வலைப்பதிவு அனுபவத்தில் வருத்தமான சேதி.

இதுவரை எனது வலைதளத்திற்கு 83,850 பேர் வருகை தந்துள்ளார்கள். 1000 கருத்துரைகளை பதிவிட்டுள்ளார்கள். தமிழ்மணத்தில் தற்போது 26-வது இடத்தில் இருக்கிறேன். இவையெல்லாம் எனக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதற்கு நீங்கள் கொடுத்த ஊக்கமே காரணம்.

மற்றபடி பல புதிய நண்பர்களை இந்த வலைத்தளம் எனக்கு பெற்று தந்திருக்கிறது. ஒருநாளில் ஒருமுறையாவது அவர்கள் பெயர்களை பார்த்தால்தான் மனது திருப்தியடைகிறது. இப்படி ஒரு நண்பர் கூட்டம் உருவாவதற்கு காரணமாக இருந்த வலையுலகிற்கும், பின்னூட்டங்கள் மூலம் தொடர்ந்து என்னை எழுத ஊக்கமளித்த அனனத்து நண்பர்களுக்கும் எனது நன்றி! நன்றி! நன்றி!

இன்னும் பல பதிவுகளில் தொடர்ந்து சிந்திப்போம்..!

எனது முதல் பதிவை பெரும்பாலான நண்பர்கள் படித்ததில்லை என்பதால் மீண்டும் இங்கே பதிவிடுகிறேன். அதனையும் படித்துப் பார்த்து தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.

நன்றி!

அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார்.


**********************************************


தெற்கேயும் ஒரு எல்லோரா


கழுகுமலையைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அங்கு போக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. என் முகநூலில் இருந்த ஜெர்மனி தேசத்து நண்பர் ஒருவர் கழுகுமலையைப் பற்றி சிலாகித்துப் பேசினார். அந்த அற்புதத்தை இதுவரை நான் பார்த்ததில்லை, என்றதும் 'அட! அற்ப பதரே...!' என்று என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார். நமது கலைப் பொக்கிஷங்களைப் பற்றி நம்மை விட வெளிநாட்டினர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.



அந்த உரையாடலுக்குப் பின் கழுகுமலையைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற தீராத வேட்கை என்னுள் குடிகொண்டது.

ஒரு நல்ல நாள், காலைப் பொழுதில் மைசூரிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவில்பட்டிக்கு டிக்கெட் எடுத்து ஏறிக் கொண்டேன். கழுகுமலைக்கு கோவில்பட்டி வழியாகத்தான் போயாக வேண்டும். ரயில் சீமைக்கருவேலம் செடிகளுக்கு நடுவே போய்க் கொண்டிருந்தது.

அன்று வெயில் இல்லை!

லேசான மேகமூட்டம்... 

இதமான சாரல்...
குளுமையான காற்று...
பயணத்தை இனிமையாக்க இது போதாதா...?!

இப்படிப்பட்ட சூழல் மனிதர்களை விட மயில்களுக்கு மிகவும் பிடிக்கும்.

திருமங்கலத்தைக் கடந்து விட்டால் ரயில் பாதை அருகே நிறைய மயில்கள் பறந்து திரியும்! 

நமக்கு நல் அதிர்ஷ்டம் இருந்தால், அந்த மயில்கள் தோகை விரித்து ஆடுவதையும் பார்க்கலாம்.

இயற்கையின் இனிமையை ரசித்தபடி கோவில்பட்டி வந்து சேர்ந்தேன்.
பகல் ரயிலில் ஒரு சௌகர்யம் இருக்கிறது. நாம் எந்த ஊருக்கு அருகில் பயணிக்கிறோமோ அந்த ஊர் தின்பண்டங்களை ரயிலில் விற்று வருவார்கள்.
மணப்பாறை முறுக்கு, கடம்பூர் போளி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா வரிசையில் கோவில்பட்டி கடலை மிட்டாயக்கும் இடம் உண்டு. இதற்கு ருசியும் அதிகம்!

கோவில்பட்டியில் இறங்கினேன். மதுரையிலிருந்து 92 கி.மீ. பயணித்து வந்திருந்தேன். இங்கிருந்து இனி பஸ்ஸில் போகவேண்டும்.

கழுகுமலை இங்கேயிருந்து சங்கரன்கோவில் போகும் வழியில் 25வது கி.மீ. தொலைவில் இருக்கிறது.

பஸ் நிலையத்தில் சங்கரன்கோவில் செல்லும் பஸ் தயாராக உறுமிக் கொண்டு நின்றது. அதில் ஏறினேன்.

கோவில்பட்டி நகர எல்லையைக் கடந்து சங்கரன் கோவில் ரோட்டில் பயணிக்கும் போதே கிராமிய மணம் காற்றோடு கலந்து வருகிறது. இந்தப் பகுதிக்கும் பறவை, விலங்கு போன்ற உயிரினங்களுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது போலும். ஊர் பெயர்கள் குருவி குளம், வானரமுட்டி, நாலாட்டின் புத்தூர், கழுகுமலை என்று அவைகளின் பெயரிலேயே இருக்கிறது. ஒருவழியாக கழுகுமலை வந்து சேர்ந்தேன். கழுகுமலை பஸ் நிலையமும் சமணர் மலையும், ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் போல் அருகருகே இருக்கின்றன. நடந்து செல்லும் தொலைவில் மலைமீது ஏறுவதற்கான நுழைவு வாயில் இருக்கிறது.

  மலையின் உயரமும் குறைவுதான். 300 அடி. உயரத்தை விட அகலமாக பரவியிருக்கும் மலை இது. சமணர்கள் வாழ்ந்த மலைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. பெரும் பாறைதான் அவர்களின் இலக்காக இருந்திருக்கிறது. மரங்கள், செடிகள் சூழ்ந்த மலைகçe அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ தெரியவில்லை. யானை மலை, கீழ்க்குயில் குடி, அரிட்டாப்பட்டி, நாகமலைப்புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருக்கும் சமணர் மலைகள் இதைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. விதிவிலக்காக சிதறாலைச் சொல்லலாம். அங்குதான் கொஞ்சம் பசுமை கண்ணுக்குத் தெரிகிறது. கழுகுமலையின் படிக்கட்டுகளில் ஏறினேன். 15 நிமிடங்களில் உச்சியை அடைந்து விடலாம். உயரம் செல்ல செல்ல கீழே தெரியும் காட்சிகள் ஆச்சரியமாக விரிந்தது. உயரத்திலிருந்து பார்க்கும்போது பூமித்தாய் பசுமைப் போர்வையை தன் மீது அடர்த்தியாக போர்த்திக் கொண்டதுபோல் இருந்தது. எங்கும் பசுமை. கண்ணை குளிர்ச்சியாக்கியது. மலையின் கிழக்குப் பக்கம் வெட்டுவான் கோயில் இருக்கிறது. இதை தென்னகத்தின் எல்லோரா என்று சொல்கிறார்கள். எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயில்தான் ஒரே கல்லில் பாறையின் மேலிருந்து கீழ்பக்கமாக செதுக்கிக் கொண்டே வருவார்கள். இந்தக் கோயிலும் அதே பாணியில்தான் அமைக்கப்பட்டுள்ளது.





ல்லோராவின் பாறை கடினத்தன்மையற்றது. கழுகுமலையோ கடினமான பாறையால் ஆனது. இந்த கடினமான பாறையை 25 அடி ஆழத்திற்கு நான்கு புறமும், வெட்டி எடுத்து. நடுமையத்தில் அழகிய கோயிலை உருவாக்கியிருக்கிறார்கள். கி.பி.8ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் உருவாக்கப்பட்டகோயில், முழுமை பெறாமல் பாதியோடு நிற்கிறது. கோபுர சிகரமும், கருவறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோயில் கோபுரத்தில் உமாமகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மரும். வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் உள்ளன. அவற்றுக்கு கீழே யாளி வரிகளும், கமோதகமும் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஒரு சிற்பக் களஞ்சியமாக இந்த இடம் உள்ளது. இந்த வெட்டுவான் கோயிலிருக்கும் மலையின் பெயரை அரைமலை என்று சொல்கிறார்கள். பாண்டியன் பராந்தக நெடுஞ்செழியன் காலத்தில் இங்கு நிலைப்படை ஒன்று இருந்ததாம். வரலாறு இப்படி சொன்னாலும் உள்ளூர் மக்கள் வெட்டுவான் கோயிலைப் பற்றி சிறப்பான கதையயான்றை சொல்கிறார்கள். 

பாண்டிய நாட்டில் மிகப் புகழ்பெற்ற ஒரு சிற்பி இருந்தான். அவன் சிலை செதுக்கும் நேர்த்தியைக் கண்டு அவன்தான் தெய்வ தச்சன் என்று அழைக்கப்படும் மயன் என்றே நம்பினர். அவனுக்கு ஒரு மகன் இருந்தான். மிகச் சிறியவன். கோயில் திருவிழாவில் திரண்டிருந்த கூட்டத்தில் மகனை தொலைத்து விட்டான். அதன்பின் எங்கெங்கோ தேடியும் மகன் கிடைக்கவில்லை. மகனுக்காக பல நாட்கள் அழுது புலம்பினான். பிறகு மனதை தேற்றிக் கொண்டு இந்த மலைக்கு வந்தான். சமணத் துறவிகள் சிலைகள் வடித்துக் கொடுத்துக் கொண்டு இங்கேயே தங்கி விட்டான். இந்த மலையே அவனது உலகமானது.


சில வருடங்கள் கழித்து மலையின் கீழ்பகுதியிலிருந்து கல் செதுக்கும் ஒலி கேட்கத் தொடங்கியது. அதைப் பெரிதாக அவன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மலைக்கு மேலே வருபவர்கள் எல்லாம் அந்த சிற்பியைப் பற்றியே பேசினார்கள். சிலர் இவனிடம் கீழே ஒரு இளைஞன் என்னமாக சிலை செதுக்குகிறான் தெரியுமா? ஒவ்வொன்றும் கண்களை விட்டு அகலாத அழகு! பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது...! என்று சொன்னார்கள். வருபவர்கள் எல்லாம் புதிதாக முளைத்த அந்த சிற்பியைப் பற்றியே பேசியது இவனுக்கு வெறுப்பைத் தந்தது?
ஒரு நாள் கோபத்துடன் தன் கையிலிருக்கும் உளியைக் கீழே சிலை செதுக்கும் இளம் சிற்பியை நோக்கி வீசி எறிந்தான். அவன் அப்பா...! என்று அலறி விழுந்தான். அந்த இறுதிக்குரல் சிற்பியை இழுத்தது. போய் பார்த்தால் திருவிழாவில் காணாமல் போன அவனுடைய மகன். உளி தலையை இரண்டாக வெட்டியிருந்தது. மகன் செதுக்கிய சிற்பங்களைப் பார்த்து மலைத்துப் போய் நிற்கிறான். மகனை மடியில் போட்டு அழுகிறான். இப்படி சிற்பி பாதியிலேயே இறந்து போனதால் கோயிலும் முடிவு பெறாமல் இருக்கிறது என்றும் வெட்டியதால் வெட்டுவான் கோயில் என்று பெயர் வந்ததாகவும், பாறையிலிருந்து வெட்டியயடுக்கப்பட்ட கோயில் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். சிலைகள் ஒவ்வொன்றும் பேசும் அழகு. கோயிலின் முகப்பின் அன்னியோன்யமாகப் பேசிக் கொண்டிருக்கும் சிவன்-பார்வதி சிற்பங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. 
பொதுவாக கோபுரங்களிலில் காணப்படும் சுதைச் சிற்பங்கள் இங்கு கருங்கல்லில் நுணுக்கமான அழகுடன் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. நடன மாதர்களின் சிற்ப அழகும் வியக்க வைக்கிறது. இதுபோன்ற ஒரு கலைப்படைப்பு மேலைநாடுகளில் இருந்திருந்தால் இந்நேரம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டிருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் தமிழர்களுக்குக் கூட இதன் அருமை தெரியவில்லை.

  
வெட்டுவான் கோயிலிலிருந்து மலையின் மேற்கு பகுதியில் சென்றால் பாறையின் சரிவில் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் வரிசையாக உள்ளன. சமணர்கள் தங்களின் குரு, தாய், தந்தை, மகன், மகள் நினைவாக இந்த சிற்பங்கçe உருவாக்கியிருக்கிறார்கள். சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயரை வட்டெழுத்துக்களாகப் பொறித்தும் வைத்துள்ளார்கள். 

மூன்று வரிசைகளாக இந்த சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சேலைகளுக்கும், பார்டர்களுக்கும் பயன்படுத்துவது போன்ற வடிவமைப்பை அந்த காலத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமணர்கள், தியானம் செய்த குகையும் இங்குள்ளது. சமீப காலத்தில் ஒரு அய்யனார் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவிலின் பின்புற சுவருக்கும், பாறைக்கும் இடையே இருக்கும் சிற்பங்களின் அழகு வெளியே தெரியாமல் கோவில் சுவர் மறைத்திருக்கிறது. நமது மக்களுக்கு கலைகளின் அழகும், பாரம்பரியத்தின் பெருமையும் தெரியவில்லை என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தை பார்க்க முடியாது. அய்யனார் கோயில் அருகே செல்லும் பாதை வழியாக மேலே சென்றால் அங்கு ஒரு மகாவீரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பார்த்து திரும்பலாம். எல்லா மலைகளிலும் இருப்பது போல் இங்கும் குரங்குகள் தொல்லை இருக்கிறது. வெட்டுவான் கோயிலில் இருந்து சமணர் சிற்பங்களுக்கு போகும் வழியில் ஒரு சிறிய குளம் இருக்கிறது. சமணர்கள் நீராடுவதற்கும் அருந்துவதற்கும் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 




கழுகுமலையில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கழுகாசலமூர்த்தி முருகன் கோயில். அருணகிரிநாதர் இந்தத் தலத்தைப் பற்றி பாடியிருக்கிறார். மலையைக் குடைந்து குகைக்குள் மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளதால் இதைக் குடவறைக் கோயில் என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு விமானம் கிடையாது. மலையே விமானமாக திகழ்கிறது. கருவறையில் வள்ளி, தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் இருப்பது போல் அல்லாமல் முருகனின் வாகனமாக மயில் இடது பக்கத்தில் காட்சி தருகிறது. இது கோயிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும் 6 கரங்களும் தான் உள்ளது. தென்னிந்தியாவிலேயே இந்தக் கோயில் மட்டும்தான் இப்படி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளுக்கு அடுத்ததாக சிறப்பு பெற்றது இந்தக் கோயில். இதை தென்பழனி என்று அழைக்கிறார்கள். 

இங்குள்ள மலையின் கற்பாறையைக் குடைந்து மூர்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடவறைக் கோயில் ஆகும். சுற்றுப்பிரகாரம் கிடையாது என்பதால் மலையைச் சுற்றித்தான் வர வேண்டும். அகத்தியர் பொதிகை மலைக்குச் செல்லும் போது இந்தத் தலத்தில் தங்கி பூஜை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவிலும் பாண்டிய மன்னர்களால் 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலை எட்டயபுரத்து ஜமீன் வழி வாரிசுகள் நிர்வகித்து வருகின்றனர். சிற்பங்களும், ஓவியங்களும் சிறந்து விளங்கும் ஒரு கலைக்கூடமாகவே கழுகாசலமூர்த்தி கோயில் விளங்குகிறது. அரிதான பல வரலாற்று பொக்கி­ங்கள் நிறைந்த இடம் கழுகுமலை. நீங்களும் ஒருமுறை வந்து பாருங்கள்...!



71 கருத்துகள்

  1. பதில்கள்
    1. முதலாவதாக வந்து வாழ்த்துக்கள் வழங்கிய நண்பருக்கு நன்றி!

      நீக்கு
  2. சதம் அடிச்சாச்சு.இனி நூறு ஆயிரமாக ,ஆயிரங்களாக வாழ்த்துகள்
    கழுகுமலை பற்றிய சிறப்பான கட்டுரை!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா நூறாவது பதிவும்...ம்..ம் மேலும் நூறு ஆயிரம் ஆக என் வாழ்த்துக்கள் ....!

    கல்லாரும் கற்றுணர்ந் தோரும் படித்தென்றும்
    உற்றுணர மேலும்தா ரும் !

    கழுகு மலையின் சிறப்பை அறிந்தேன். பார்க்க தூண்டும் விபரங்கள். தங்களுக்காவது பார்க்கக் கிடைத்ததே மகிழ்ச்சி. எத்துணை சிறப்புகள் அழகிய கற்சிலைகள். வெட்டுவான் என பெயர் கொண்டது திகைப்பே. அருமையான பதிவு ! நன்றி நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து முதல் பதிவையும் படித்து கருத்திட்ட தங்களுக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  4. பதிவுகளும், பகிர்வுகளும் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் நூறாவது பதிவுக்கு முதற்கண் வாழ்த்துகள்! அது போன்றே முதற் பதிவும் படங்களும் பாராட்டத் தக்கன!

    பதிலளிநீக்கு
  6. முதலில் தங்களின் நூறவது பதிவிற்கு வாழ்த்துக்கள். மேலும் சிறப்பாய் தங்கள் பணி தொடரட்டும்....

    தெற்கேயும் ஒரு எல்லோரா...பற்றி அறியத் தந்தீர்கள்.

    ஆம் அயல் நாட்டில் சில சிற்பங்களை வைத்தே அவர்கள் அதை கொண்டாடுகிறார்கள்.

    அழகிய சிற்பங்கள்...நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கும் முதல் பதிவின் பாராட்டுக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  7. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.
    முதல் பதிவிலேயே அனைவரின் மனத்தை கவர்ந்தது எனலாம் தங்களின் படைப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள் தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
  8. இன்னும் பல பதிவுகளில் தொடர்ந்து சிந்திப்போம்..! தொடருவோம்.. நூறாவது பதிவை தொட்டுவிட்டதற்கு வாழ்த்துக்கள்.!!!

    பதிலளிநீக்கு
  9. 100ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள். கைலாசநாதர் கோயில் நமக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம். அருமையான பதிவுகளாகத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்று ஆய்வாளரான தங்களின் பாராட்டு எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  10. தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். முதல் பதிவை 100ல் படித்தேன்.அருமையான தொகுப்பு. வாழ்த்துக்கள் தொடர்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுக்கு வந்து கருத்திட்டு வாழ்த்தியதற்கு நன்றி சகோ!

      நீக்கு
  11. வாழ்த்துகள் நண்பரே!

    எல்லோராலும் விரும்பப்படுகின்ற எழுத்துகளைக் கொண்டமைக்கு!


    த ம 8

    பதிலளிநீக்கு
  12. மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி சார்! நீங்கள்தான் எனக்கு முதல் ஊக்கம் கொடுத்தவர். தொடர்கிறேன்.

      நீக்கு
  13. நூறாவது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!

    முதல் பதிவு முழுமையும் வாசித்தேன். தகவல்களும் புகைப்படங்களும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் முதல் பதிவை வாசித்து கருத்து சொல்லி வாழ்த்தியதற்கும் நன்றி மனோ மேடம்!

      நீக்கு
  14. தங்களின் நூறாவது பதிவுக்கு என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள். தங்களின் முதல் பதிவினில் உள்ள படங்களும் செய்திகளும் மிக அருமையாகவே உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து மேலும் பல வெற்றிகள் தங்களுக்குக் கிட்டட்டும் என வாழ்த்துகிறேன்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா, எனது 100-வது பதிவில் தங்களது வருகையும் கருத்தும் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு பெருமிதம் அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா!

      நீக்கு
    2. என் வலைச்சர ஆசிரியர் பணிக்காலம் முடிவதற்குள், தங்களின் வலைத்தளம் கட்டாயமாக ஒருநாள் வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட உள்ளது என்பதை அன்புடனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். அநேகமாக அது 04.07.2015 அன்று இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தாங்கள் எப்போதும்போல வலைச்சரம் பக்கம் தினமும் வருகைதந்து கருத்துக்கள் கூறி சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      என்றும் அன்புடன் தங்கள்
      வை. கோபாலகிருஷ்ணன்
      gopu1949.blogspot.in

      நீக்கு
    3. பெருமிதம் கொள்கிறேனய்யா,
      வலைச்சரத்தில் என் பதிவையும் தாங்கள் அறிமுகப்படுத்த முடிவு எடுத்து, அதற்கான தேதியையும் அறிவித்திருப்பது என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு செல்கிறது.
      மிக்க நன்றி அய்யா!

      தினமும் வலைச்சரத்திற்கு வருகிறேன். நன்றி அய்யா!

      நீக்கு
    4. அன்புடையீர், வணக்கம். கீழே உள்ள இணைப்புக்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.
      http://gopu1949.blogspot.in/2015/07/34.html அன்புடன் VGK

      நீக்கு
    5. அன்புடையீர், வணக்கம். கீழே உள்ள இணைப்புக்கு தயவுசெய்து வருகை தாருங்கள்.
      http://gopu1949.blogspot.in/2015/07/34.html அன்புடன் VGK

      நீக்கு
    6. மிக்க நன்றி அய்யா!
      தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் என்னை அறிமுகப்படுத்தி எனக்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றிகள்!

      நீக்கு
  15. தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து வலைப்பதிவில் எழுதுங்கள்.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா, தொடர்ந்து எழுதுகிறேன்.தாங்களும் வருகை தந்து கருத்திட்டு ஊக்கம் கொடுங்கள்!

      நீக்கு
  16. வணக்கம் நண்பரே முதலில் சதம் அடித்தமைக்கு வாழ்த்துகள்
    என்னை மறந்து விட்டீர்கள் என்று நினைத்துக் கொண்டுதான் வந்தேன் ஆனால் பதிவில் என்னைப்பற்றி குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் பரவாயில்லை அதிலாவது இருக்கிறோமே என்று மனதார வாழ்த்தி விடை பெறுகிறேன் தொடருங்கள் விரைவில் 200 ஆகட்டும்
    தமிழ் மணம் 111

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வி.ஐ.பி.யை மறக்க முடியுமா? கில்லர்ஜி தானே என்னை வேட்பாளராக்கி வாக்குகள் குவிய வைத்தவர். வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
    2. நான் மறந்து விட்டதாக குறிப்பிட்டது தங்களது பதிவில் அல்ல எனது பதிவுக்கு வருவதை.

      நீக்கு
    3. தங்களின் எல்லா பதிவுக்கும் வந்துவிட்டேனே நண்பரே! கடைசியாக நீங்கள் எழுதிய பதிவையும் வாசித்து சிரித்து கருத்து எழுதினேனே. மறந்து விட்டீர்களா..?

      நீக்கு
    4. நான் எதையுமே மறப்பதில்லை நண்பரே... (கருத்துரை வராத) இதையும்...

      நீக்கு
    5. உண்மைதான் ஜி, நீங்கள் சொன்ன பிறகு பார்த்தேன் எனது கருத்துரை இல்லை. ஆனால், நான் அதை படித்து பார்த்து கமெண்டும் போட்டிருந்தேன். '2ஜி (பகவான் ஜி, கில்லர் ஜி) பரபரப்பு வலையுலகில் இன்னமும் ஓயவில்லை போலும்..' என்று போட்டிருந்தேன். அப்போது எனது நெட்வொர்க் விட்டுவிட்டு வந்து கொண்டிருந்தது. அதனால் அந்த கருத்துரை பதிவாகவில்லை என்று நினைக்கிறேன். தொழில்நுட்ப கோளாறு..!

      நீக்கு
    6. மீள் வருகைக்கு நன்றி நண்பரே....

      நீக்கு
    7. நினைவூட்டலுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  17. Happy to see and ready your 100th post, and wishing to touch 500th post very soon. Thanks to mention my name, and happy that my blog also inspired you to write.

    Wishing you may more success and friends in the future !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வலைப்பதிவு துவங்க காரணமாக இருந்தவரே நீங்கள்தான். ஒருமுறையாவது கருத்திடுவீர்கள் என்று பார்த்தால் 100-வது பதிவில் தான் தரிசிக்க முடிந்தது. தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  18. செந்தில்,

    100ரோடு இன்னொரு 0 வர வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  19. vazthukkal sir. sathapthiyil oru nal payana katturaiyin mulam ungalathu pathivukalai padikka aarampithen.
    pinnottam ittathu kidaiyathu aanal thinamum ungalathu pathivukalai vasikkiren.
    samipathiya ungalathu pathivukal mikavum kavarnthathu kurippaaka kudivaada naagarathinam avarudaiyathu.
    thodarungal thodarkiren sir.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மகேஷ் தொடர்ந்து வாருங்கள் தங்கள் ஆதரவுக்கு நன்றி!

      நீக்கு
  20. குருவை மிஞ்சி விட்டீர்கள் ,நீங்கள் த ம வில் 26 இடத்தைப் பிடித்து விட்டீர்களே ,மேலும் உயர வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சொல்லாதீர்கள் ஜி, அவர் வேளையில் பிசியாக இருக்கிறார். இல்லையென்றால் நெருங்கவே முடியாது. அவரும் உங்களைப் போல் ஜாம்பவான் தான்.

      நீக்கு
    2. பகவான்ஜி மேலும் உயர வாழ்த்துகள் என்றால் 26 க்கு மேலேயா ? கீழே வந்து 1 றை பிடிக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் நண்பரே...

      நீக்கு
    3. தங்கள் அன்புக்கு நன்றி ஜி!
      ஆனால் முதலிடம் எல்லாம் முடியாது. நண்பரே!
      வருகிற 18-ந் தேதி முதல் எங்களது நாளிதழ் வெளிவரவுள்ளது. அதில் ஆசிரியர் பொறுப்பு எனக்கு. அதன் பின் வலைப்பக்கம் வரமுடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. எப்படியாவது ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் ஒதுக்கி வந்துவிட வேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறேன். பார்ப்போம்..!

      நீக்கு
    4. 'அக்ரி டாக்டர்' இந்தியாவின் முதல் விவசாய நாளிதழ் தமிழில்.
      கடந்த மூன்று ஆண்டுகளாக மாத இதழாக வந்து கொண்டிருந்த பத்திரிகை, இப்போது நாளிதழாக புது அவதாரம் எடுக்கிறது. அய்யா!

      நீக்கு
  21. தங்களின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
    தங்களின் முதல் பதிவினையும் கண்டு மகிழ்ந்தேன்
    தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி ஜி, கில்லர்ஜி போல் தாங்களும் எனது அனைத்து பதிவுக்கும் வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  22. தங்களுக்கு நூறாவது பதிவு... எனக்கு உங்கள் தளத்துக்கு முதல் வருகை (என்று நினைக்கிறேன்)... சுவாரஸ்யம்... தொடர்கிறேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே!
      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  23. வணக்கம் தோழர் வாழ்த்துக்கள்..
    நான் வந்த கதை நகைச்சுவை.. எனவே இப்போது வேண்டாம்..
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு சமயத்தில் அதை சொல்லுங்கள். வருகைக்கும் வாக்குக்கும் நன்றி.

      நீக்கு
  24. வணக்கம்
    100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்.த.ம1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  25. ஹை! செஞ்சுரி!!!!! இன்னும் பல சதங்கள் அடித்து எங்கள் எல்லோருக்கும், மனதிற்கும், மூளைக்கும் நல்விருந்து படைத்து மகிழ்விக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! நண்பரே! தங்களது பதிவுகளைப் படிக்க மிகவும் சுவாரஸ்யம்! பத்திரிகையாளர் அல்லவா! கேட்கவேண்டுமா! தங்களின் புதிய பொறுப்பிற்கும் எங்களது வாழ்த்துகள்! கலக்குங்கள்! நிச்சயமாக நீங்கள் இவ்வுலகம் போற்றும் ஒரு சிறந்த பத்திரிகையாளர் ஆவீர்கள் என்று நம்புகின்றோம்! நம் வலைத்தள நண்பர்கள் எல்லோரும் உங்களை அதை அடைய வாழ்த்துகின்றோம்!

    (கீதா: கழுகு மலை! ஆஹா....திருமணத்திற்கு முன் நாகர்கோவில் வாசம் என்பதால்...பள்ளி கோடை விடுமுறை என்றால், ஆசிரியராக இருந்த எனது மாமா அவர்கள், நாங்கள் கூட்டுக் குடும்பம்-குடும்பத்தில் இருந்த குழந்தைகள் அனைவரையும் கல்வி சம்பந்தமான இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்.....அதுவும் மிகச் சிறிய பட்ஜெட்டில்....அப்படிச் சென்ற இடம் தான் கழுகுமலை......அப்போதெல்லாம் இத்தனை ஃபேமஸ் ஆகவில்லை. மிகவும் கஷ்டப்பட்டுதான் சென்றோம்..வெயில் வேறு....பல தூரங்கள் நடத்தியே அழைத்துச் சென்றார். எல்லாமே மழுங்கலாகத்தான் நினைவில் உள்ளது. தங்களது குறிப்புகளை வாசிக்கும் போது சில நினைவுகள் எட்டிப்பார்க்கிறது. ஆனாலு முழுதும் நினைவில்லை. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் போக வேண்டும்...அட அந்தக் குளம் இன்றும் பளிச் என்று இருக்கிறதே! பரவாயில்லை...யாரும் அதன் தூய்மையைக் கெடுக்கவில்லை...மிக்க நன்றி நினைவுகளை மீட்டியதற்கு..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பர்களே,
      வெகு நாட்கள் எனது வலைப்பக்கம் தங்களை காண முடியவில்லை. தங்களின் விரிவான பின்னூட்டம் வாழ்த்து பாராட்டு எல்லாமே மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி நண்பரே!

      தங்களின் கழுகுமலை அனுபவமும் சிறப்பு.

      நீக்கு
  26. நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! தமிழ்மண வரிசைப்பட்டியலில் 25 ஆம் இடத்தில் உள்ள தங்களது பதிவு விரைவில் முதலிடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்து பதிவுக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  27. மேலும் உங்கள் எழுத்துப் பயணம் சிறக்க என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை