Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

 
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா-2015 இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL NADU VIRTUVAL UNIVERSITY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பி) பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் மட்டுமே. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய மேற்கண்ட வலைப்பக்கத்தை அன்பு கூர்ந்து இணைப்புத் தந்து அறிமுகப்படுத்துங்கள். இணையத் தமிழால் இணைவோம்.


     நன்றி: சசிகலா 




30 கருத்துகள்

  1. தங்களது பங்களிப்பும் சிறப்பு
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  2. புதுக்கோட்டை விழாவிற்காக கைகோர்த்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள் சகோ,
    தாங்கள் பகிர்ந்ததும் அருமை,

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் சகோ,
    தாங்கள் பகிர்ந்ததும் அருமை,

    பதிலளிநீக்கு
  5. ஆஹா மிக்க மகிழ்ச்சி....உங்களின் ஒத்துழைப்புடன் பதிவர் விழாவை சிறப்பாக நடத்துவோம்...நன்றி..

    பதிலளிநீக்கு
  6. ஆஹா மிக்க மகிழ்ச்சி....உங்களின் ஒத்துழைப்புடன் பதிவர் விழாவை சிறப்பாக நடத்துவோம்...நன்றி..

    பதிலளிநீக்கு
  7. தேர்தல் கால பரபரப்பினையும் மிஞ்சிவிட்டது
    நம் பதிவர் திருவிழா
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துக்கள் சகோ ! ஒரே அமர்க்களம் தான் போங்க....

    பதிலளிநீக்கு
  9. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. போட்டி பற்றிய பகிர்வை தாங்களும் பகிர்ந்ததில் மகிழ்ச்சிங்க சகோ. ஆனால் இதென்ன இறுதியில் ?
    என் பெயரில் வேறு பதிவரும் இருப்பாங்க போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் வலைப்பக்கத்தில் இருந்துதான் இந்த விவரங்களை எடுத்து வெளியிட்டேன். (அதாவது வெட்டி ஒட்டுதல்) அதற்காகத்தான் உங்களுக்கு தனியாக ஒரு நன்றி.
      வருகைக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  11. கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் 'எங்கள்' அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சார்பாக நானும் வாழ்த்து சொல்லிக்கொள்கிறேன்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  12. அருமை! அருமை! அசத்துறீங்க நீங்களும் பதிவிட்டு!

    பங்குபற்றும் அனைத்து உறவுகளுக்கும் வெற்றி பெறப்போகின்றவர்களும்
    என் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

    எல்லோருமே ஒரே விடயத்தைப் பதிவிடுவதால் யார் வலைப்பூவுக்குப் போனேன்
    போகவில்லை. கருத்து எழுதினேனா இல்லையா என்பதனைக் கண்டுகொள்ளவே
    நேரமாகிறது!.. தாமத வருகை இங்கு! பொறுத்திடுங்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை, சகோ!
      தாங்கள் வந்ததே சிறப்புதான். தாமதமானால் என்ன..!
      வருகைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி!

      நீக்கு
  13. அனைவருக்கும்(உங்களுக்கும்தான்) வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தில் என்னையும் சேர்த்துவிட்டீர்கள். அதற்காகவாவது ஒரு கட்டுரை எழுத வேண்டும். மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  14. அறிவிப்பில் கைகோர்த்தற்கு மிக்க நன்றி!

    அனைவருக்கும் தங்களுக்கும் சேர்த்து வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..! நீங்களும் என்னை சேர்த்துவிட்டீர்களே. நேரம் ஒத்துழைத்தால் ஒரு கட்டுரை எழுதிவிட வேண்டியதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பர்களே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை