Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

உலகின் மிகப்பெரிய தேவாலயம்


லகின் மிகப்பெரிய தேவாலயம் ரோமிலுள்ள வாடிகன் நாட்டில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயமே. இதன் விதானம் 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் விதானத்தின் மேல் ஏறி தேவைப்படும்போது ஜன்னல்களை திறக்க வேண்டும், மூட வேண்டும், பழுது பார்க்க வேண்டும், விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் அவர்கள் வேலை. இதுபோக, திருவிழா நாட்களில் 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீபங்களும் கொண்டு விதானத்தை அலங்கரிக்கப்பதும் இவர்கள் கையில்தான் இருக்கிறது.  

செயின்ட் பீட்டர்'ஸ் தேவாலயம்
ஆலயத்தின் முன்னாள் ஒரு லட்சம் பேர் கூடுவதற்கேற்ற மிகப்பெரிய முற்றம் ஒன்று இருக்கிறது. மக்களை ஆசீர்வதிப்பதற்காக போப் ஆண்டவர் பால்கனியில் காட்சி அளிக்கும் போது முற்றம் நிரம்பி வழியும். இந்த பால்கனியில் இருந்து பார்த்தால் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் தெளிவாக பார்க்க முடியும்.

இந்த ஆலயம் செயின்ட் பீட்டர் இறந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கும் மேலானது. 1453-ம் ஆண்டு தொடங்கி 1609-ல் முடிவடைந்தது.

செயின்ட் பீட்டர்'ஸ் சதுக்கம்
நான்காம் நூற்றாண்டில் இந்த தேவாலயம் மரத்தால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் கழித்து மரத்தால் ஆன தேவாலயம் அழியத் தொடங்கியது. அந்த சமயத்தில் மறுபடியும் பிரம்மாண்டமான ஒரு தேவாலயமாக கட்டத் தொடங்கினார்கள். ஆலயத்தின் உள்ளே 43 ஆயிரம் பேர் மண்டியிட்டு இறைவனை பிரார்த்திக்க முடியும். திருவிழா நேரங்களில் ஆலயத்தில் இருக்கும் மிகப்பெரிய 800 தூண்களும் அலங்கரிக்கப்பட்டு, தேவலோகமாக காட்சியளிக்கும்.  

தேவாலயத்தின் உள்ளே
இந்த தேவாலயத்தில் போப்பாண்டவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த சமாதிகளுக்கு 24 மணி நேரமும் பூஜை நடைபெறுகிறது. பக்தர்கள் வழிபடுவதற்கென்றெ 27 இடங்கள் இருக்கின்றன. பைபிள் பல மொழிகளில் வாசிக்கப்படுகிறது. ஆலயப் பொக்கிஷத்தில் ஆபரணங்களும், தங்கச் சிலுவைகளும் உலகத்திலுள்ள எல்லா வகையான நாணயங்களும் பதக்கங்களும் இருக்கின்றன. இவற்றை மட்டும் பார்பதற்கே பலநாட்கள் செலவிட வேண்டும். கலைக்கூடங்கள், நூலகங்கள், புராதனச் சேகரிப்பு பொக்கிஷங்கள் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதில் உள் நுழைவதற்கான அத்தாட்சி அட்டைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த அட்டைகள் இருந்தால் மட்டுமே பொக்கிஷ அறைகளுக்குள் நுழைய முடியும்.

மைகேல் ஏஞ்சலோ ஓவியம்
பல கிலோமீட்டர் தொலைவுக்கு நின்று பார்த்தாலும் இந்த ஆலயம் நன்றாக தெரியும். ஆலயத்தின் மேல் பக்கத்தில் பொன் தகடுகள் பதிக்கப்பட்டு பளபளக்கின்றன. உச்சியில் பளிங்கு எழுத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் ஏஞ்சலோ என்ற உன்னத கலைஞனின் ஓவியப் படைப்புகள் விதானத்தை அலங்கரிக்கிறது. விதானத்தின் வடிவமைப்பும் ஏஞ்சலோவின் கற்பனைபடியே வடிவமைக்கப்பட்டது.

'இறுதித் தீர்ப்பு' - மைகேல் ஏஞ்சலோ ஓவியம்
ஆலயத்தை காவல் காப்பதற்காக சுவிட்சர்லாந்தில் இருந்து 100 காவலாளிகள் சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் சீருடை அணிந்து இறகு சொருகப்பட்ட தொப்பியுடனும், ஈட்டியுடனும் நிற்கிறார்கள். 

மதகுருமார்கள் கருஞ்சிவப்பு ஆடையை அணிந்து இருப்பார்கள். போப்பாண்டவர் தங்க வேலைப்பாடுகளால் ஆன மூன்று முடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட குல்லாவை அணிந்து உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். அவரை உயர்ந்த பீடத்திற்கு தூக்கிச்செல்வார்கள். அவர் தனது கையை உயர்த்தி மக்களை ஆசீர்வாதம் செய்யும் பொது 'வைவாஇல் பா(ப)பா!' என்ற கோஷம் மைக்கேல் ஏஞ்சலோ விதானத்தை நிரப்பும். அந்த கோஷத்திற்கு 'போப்பாண்டவர் நீடூழி வாழ்க!' என்று பொருள்.

நூலகம்
இதுவே உலகில் மிகப்பெரிய தேவாலயம் ஆகும். மிக உயரமான கிருஸ்துவ ஆலயம் எதுவென்றால் அது ஜெர்மனியில் 'உல்ம்' என்ற நகரில் இருக்கிறது. 1377-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம் 188.7 மீட்டர் உயரம் கொண்டது. ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர்கள் இங்கு பிரார்த்தனை நடத்த முடியும்.

இரவில் வாடிகன்



23 கருத்துகள்

  1. படங்கள் அந்த இடத்தின் அழகைச் சொல்கின்றன. ஜோர்! இதைப் பற்றிக் கொஞ்சம் அருணா செல்வம் தளத்திலும் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. மிகவும் அழகான படங்களுடன் அற்புதமான பதிவு. முதல் படம் கவரேஜ் மிகவும் அருமை. பகிர்வுக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு

  3. வாடிகனுக்கு நேரில் சென்றதுபோன்ற உணர்வு தங்கள் பதிவில் உள்ள படங்களைப் பார்த்ததும். படங்களையும் விரிவான தகவலையும் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. அழகான படங்கள்! மிகப்பெரிய தேவாலயம் என்பதும் இந்த வாட்டிகன் பற்றியும் படித்திருந்தாலும் நீங்கள் தமிழில்பகிரும் விதம் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பர்களே!

      நீக்கு
  5. புகைப்படங்கள் அருமை. மிகப் பெரிய தேவாலயம் பற்றி விரிவாய் பதிவு தந்து இருக்கிறீர்கள் சகோ அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  6. நேரில் பார்க்கின்ற உணர்வு.வியக்க வைக்கும் உண்மைகள்...நன்றி சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  7. பிரமிப்பான தகவல் களஞ்சியம்தான் நண்பரே நன்றி
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. அருமையான புகைப்படங்களுடன்
    அற்புதமான தகவல்கள்...
    அறியாத் தகவல்கள்
    தெரியப் படுத்தியமைக்கு
    நன்றி நண்பரே.....

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான படங்களுடன்
    அருமையான பதிவுநண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. நானும் நேரில் பார்த்தேன்!வியந்து போனேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  11. வாடிகன் தனி நாடு என்றும் சொல்கிறார்களே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், தனி நாடுதான். உலகிலேயே மிகச் சிறிய நாடும் இதுதான்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை