Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வம்சம்தான் தலைமுடியை தீர்மானிக்கிறது



னிதனின் தலையில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவைகள் ஒரு மாதத்துக்குள் ஒன்றேகால் சென்டி மீட்டர் நீளம் வளர்கின்றன. எல்லா தலைமுடியும் 'பாலிக்கில்ஸ்' என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. இவை அனைத்துமே செல்கள்தான். 

இந்த 'பாலிக்கில்ஸ்' பை மேல் தோலில் இருந்து கீழ் தோலை துளைத்து இருக்கும். ஒரு மனிதனுக்கு இந்த பைகள் எத்தனை இருக்க வேண்டும்? அதில் இருக்கும் முடிகளின் அடர்த்தி எத்தனை? என்பதையெல்லாம் நம்மால் தீர்மானிக்க முடியாது. நமது வம்சம்தான் தீர்மானிக்கும். வம்ச வகை என்பது நமது மரபணுக்களில் உள்ளது. 

ரோமப்பைகள் என்பது ஒரு குழந்தை கருவாக உருவான இரண்டாவது மாதத்தில் இருந்து ஐந்தாவது மாதத்துக்குள் தீர்மானமாகி அமைந்து விடுகின்றன. தலைமுடியுடன் நிறமும் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்கள் தலை முடிக்கு உண்டு. 

முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். மெலனின்தான் முடியை கருப்பாக்குகிறது. வயதாக ஆக மெலனின் சுரப்பது குறைகிறது. அதனால் தலைமுடியின் உண்மை நிறமான வெள்ளை வெளியே தெரிகிறது. 


தலைமுடி சுருட்டையாக இருப்பது, நீளமாக இருப்பது, மென்மையாக இருப்பது, கரடு முரடாக இருப்பது என்ற எல்லாமே பரம்பரை நமக்கு கொடுத்த வரம்தான். பாலிக்கில்ஸ் என்ற ரோமப்பைகள் வட்ட வடிவில் இருந்தால் தலைமுடி நீளமாக வளரும். முட்டை வடிவில் இருந்தால், முடி நீளமாகவும் வளைந்து நெளிந்தும் இருக்கும். முடிகள் எல்லா ரோமப்பைகளில் இருந்தும் வளர்வதில்லை. 

அதற்கும் ஒரு கணக்கிருக்கிறது. அதன்படி முதலில் சுறுசுறுப்பாக பைகளில் இருந்து முடி வெளியே வருகிறது. இரண்டு முதல் நான்கு வருடம் வரை ஜோராக வளர்கிறது. அதன்பின் சில வாரங்கள் சோர்ந்து போகிறது. முடியும் உதிர்கிறது. உதிர்ந்தப்பின் ரோமப்பைகள் நான்கு மாதங்கள் வரை எந்த இயக்கமும் இல்லாமல் சும்மாவே இருக்கும். 

அதன்பின்னர் மீண்டும் முளைக்கும்.  ஒவ்வொரு தலைமுடிக்கும் தனிப்பட்ட வாழ்நாள் இருக்கிறது. அதனால் தான் தினமும் முடி உதிர்கிறது. ஒரு நாளைக்கு 40 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரண நிகழ்வு. அதே வேளையில் சில ரோமங்கள் அதற்கு இணையாக புதிதாக முளைப்பதால் ரோம அடர்த்தி எப்போதும் நமக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது. 


முடி வளரும் வேகமும் ஆளுக்கு ஆள் மாறுகிறது. அவ்வளவு ஏன்? ஒரு மனிதனின் உடலிலேயே கூட ஒவ்வொரு இடத்திலும் ரோமங்களின் வளர்ச்சி ஒவ்வொரு விதமாக இருக்கிறது. முடி இழப்பு என்பது பெரும்பாலும் ஆண்களின் பிரச்சனைதான். பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்னும், மெனோபாஸுக்கு பிறகும் முடி உதிரும்.கர்ப்பமாக இருக்கும் போது முடி மிக அடர்த்தியாக வளரும். குழந்தைப் பிறந்தபின் வாரத்துக்கு ஆயிரம் என்ற கணக்கில் முடி கொட்டும். 

வழுக்கை என்பது பரம்பரை சமாச்சாரம்தான். ஆண் தன்மை அதிகப்படுத்தும் 'ஆண்ட்ரோஜன்' ஹார்மோன் சுரப்பு அதிகம் இருந்தாலும் முடி உதிரும். அதனால் வழுக்கைதலையர்கள் காதலில் கில்லாடியாக இருப்பார்கள் என்பது ஓரளவிற்கு உண்மையே!



6 கருத்துகள்

  1. செந்தில்குமார் ஜி!
    எனக்கு தலைமுடி சுருள்சுருளாக இலையே என்று சின்ன வயதில் வருத்தப் பட்டிருக்கிறேன். இருந்த நண்பர்களிடம் பொறாமைப் பட்டிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது பெரும்பாலான சுருள்முடி நண்பர்கள் வழுக்கை விழுந்த தலையர்களாய் இருக்கின்றனர். சுருலமுடிக்கும் வழுக்கைக்கும் தொடர்பு உண்டா என்று யோசிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  2. தலையாய பிரச்சனையை விரிவாக விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நான் அறியாத பல புதிய தகவல்களை உங்கள் பதிவின் வழியே தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பல அறியாத தகவல்கள்.... பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை