Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

எப்போதும் காதுக்குள் இரைச்சல்..!



மெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் காதுக்குள் இரைச்சல் என்பது ஒரு முக்கியமான நோயாக  கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எப்போதும் காதில் இரைச்சல் இருந்து கொண்டே இருப்பதால் அமைதியான உலகை அனுபவிக்க முடியாமல் இவர்கள் அவஸ்தைப்படுகிறார்கள். சில சமயம் இந்த இரைச்சல் சத்தத்தை சம்மந்தப்பட்டவர் மட்டுமல்லாமல் அருகில் இருப்பவர்களால் கூட கேட்க முடியும்.

இது முழுவதும் உடலியல் கோளாறுகளால் ஏற்படுவதாகும். காதை சுற்றியிருக்கும் ரத்தக்குழாய்கள் சுருங்கிப்போவதாலோ, அந்த ரத்தக்குழாய்களில் சிறுசிறு கட்டிகள் உருவாவதாலோ காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. கூடவே இதய துடிப்புக்கு ஏற்ப ரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும்போது இயக்கம் சிரமத்துக்குள்ளாவதால் ஒருவித சத்தம் உண்டாகி அது இரைச்சலாகவும் வெளிப்படுகிறது. நடுக்காது மற்றும் வாயின் மேற்பகுதியில் உள்ள தசைகள் கூட சிலருக்கு துடித்து அது இரைச்சலாக கேட்கிறது. 


இந்த காது இரைச்சல் நோயை உயிருக்கே ஆபத்தான நோயாகத்தான் நோயாளிகள் நினைக்கிறார்கள். ஒரு திருவிழாக் கூட்டத்தின் நடுவில் உரத்தக்குரலில் கண்டபடி கத்திக்கொண்டு இருக்கும் கூட்டத்தில் நம்மால் எவ்வளவு நேரம் இருக்க முடியும். சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். அதைக் கூட தாங்க முடியாமல் காதைப் பொத்திக்கொள்ள தோன்றும். ஆனால், இவர்களால் அப்படி எந்த தடுப்பு காரியமும் செய்ய முடியாது.

வாழ்க்கை முழுவதும் எப்போதும் காதில் பெரும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருப்பதால் நரக வேதனையை அனுபவிப்பார்கள். இந்த இரைச்சலில் காது செவிடாகிவிடும் என்று பயப்படுவார்கள். உண்மையில் இதனால் காது செவிடாகாது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க  வேண்டும்.


எந்த காரணத்தால் காது இரைச்சல் வந்தது என்பதை கண்டறியப்பட வேண்டும். காரணத்தை சரி செய்தால் இரைச்சல் மறைந்து விடும். உதாரணத்திற்கு செவிப்பறையை அழுத்திக்கொண்டு இருக்கும் அழுக்கால் உண்டான இரைச்சல் என்றால் அந்த அழுக்கை எடுத்து விட்டாலே இரைச்சலும் நின்றுவிடும். ஜலதோஷத்தால் கூட தற்காலிக இரைச்சல் ஏற்படும்.

ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, தைராய்டு பிரச்சனைகள், அதிக அளவில் ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை உபயோகிப்பது, செவிப்பறையில் ஓட்டை, காதில் சீழ்வருவது இவையெல்லாம் கூட காது இரைச்சலை கொண்டு வரலாம். இவற்றை குணப்படுத்திவிட்டால் இரைச்சல் நின்று விடும். என்றாலும், இப்படி காது இரைச்சலுக்கு காரணம் தெரிவது 20 சதவீத நோயாளிகளிடம் மட்டும்தான்.


மற்றவர்களிடம் காரணமே கண்டுபிடிக்க முடியாது. சில பொதுவான மருந்துகளை நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் கொடுத்துப்பார்ப்பார்கள். இதில் எந்த மருந்து மூலம் பயன்படுகிறதோ அந்த மருந்தை தொடர்ந்து பயன்படுத்தி நோய்க்கு தீர்வு ஏற்படுத்துவார்கள். 

ஒரு புள்ளிவிவரம் பிறவியில் காதுகேளாதவராக இல்லாமல் பின்னாளில் கேட்கும் திறன் இழந்தவர்களில் 50 சதவீதம் பேருக்கு காது இரைச்சல் இருப்பதாக சொல்கிறது.  காது இரைச்சல்  உள்ளவர்களுக்கு அதைவிட சத்தமான கூச்சல் நிறைந்த இடமே சற்று அவஸ்தையை குறைக்கும். அமைதியான சூழ்நிலையில்தான் காது இரைச்சல் அதிகப்படியான அவஸ்தைகளைத் தரும். 



22 கருத்துகள்

  1. அரிய விடயம்தான் நண்பரே பகிர்வுக்கு நன்றி
    த.ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. இரைச்சல் மிகுந்த
    இடங்களைத் தவிர்க்கலாம்
    படம் பார்ப்பதாயினும் சரி
    பாட்டுக் கேட்பதாயினும் சரி
    ஒலியின் அளவைக் குறைக்கலாம்
    காதுக்குள் இரைச்சல் தொடர்ந்தால்
    காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இரைச்சல் காதுக்குள் நரம்புகள் மற்றும் ரத்த ஓட்டத்தால் ஏற்படுவது. சுற்றுப்புறம் அமைதியாக இருந்தாலும் காதுக்குள் மட்டும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுதான் தொந்தரவு!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. எந்நேரமும் ஹெட் போனில் இசையை ரசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் முடியாது என்பதுதான் சோகம்!
      வருகைக்கு கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. இந்த மிடில் இயர் தொந்தரவுகளால் அவஸ்தைப் படுபவர்களில் நானும் ஒருவன்.

    அவ்வப்போது இதனால் வெர்டிகோ வருவதும் அதற்கான மருந்துகள் அதிகமாக சாப்பிடும்போது உடல் நடுக்கம் ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவொரு தாங்க முடியாத வேதனைதான். அதற்கான மருந்துகளின் பக்கவிளைவுகளும் தாங்க முடியாததுதான்.
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  5. இந்தக் காதின் நடுப்பகுதி தொந்தரவு எனக்கும் உண்டு சகோ. இதில் மற்றொரு காரணமும் உண்டு. சரி ஏற்கனவே இதைப்பற்றி எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். பதிவாகவே எழுதுகிறேன்.

    நீங்கள் சொல்லுவது போல் அமைதியான இடத்திலும் கூட இந்தச் சத்தம்..எனக்கு அதில் + பாயின்ட். அது என்னவோ தெரியவில்லை அமைதியான இடத்திற்குச் சென்றுவிட்டால் நான் சொல்லுவேன் என்ன ஒரு மயான அமைதி என்று. அதாவது காதில் இரைச்சல் இருக்கிறதோ இல்லையோ என் மனது சுற்றுப்புறத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டால் இந்த இரைச்சல் என்பதே என் மனதிற்குப் புலப்படுவதில்லை. நான் அதைப்பற்றி நினைப்பதே இல்லை...அதுவும் பழகிப் போனதாலோ என்னவோ...(சுவர்க்கோழிச் சத்தம் போல் இரைச்சல் இருக்கும்) சரி எனக்குச் செவி சரியாகக் கேட்பதில்லை....ஆனால் காதில் ஏற்படும் இரைச்சல் மட்டும் எப்படிக் கேட்கிறது???!!!!!! ஹஹஹ் யாரேனும் அறிவியல் ரீதியாகப் பதிலளித்தால் நன்றாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே கேட்பதில் பிரச்சனை என்று சொல்லியிருந்தீர்கள். ஆனால், இப்போது இரைச்சல் பிரச்சனையும் இருப்பது வேதனைதான். எந்த தடையையும் கடந்து வரும் துணிச்சல் தங்களுக்கு இருப்பதால் இதையும் சுலபமாக கடந்து விட்டீர்கள். மேலும் கடப்பீர்கள்.!
      வருகைக்கு மிக்க நன்றி!

      நீக்கு
  6. தொடர்ந்து இரைச்சல் கேட்டால் எத்தனை கொடுமை.....

    பதிலளிநீக்கு
  7. யனக்கும் சில வருடகலாக இருகிரது.... பார்காத மருத்துவம் இல்லை.... தீர்வு இருதால் கூரவும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை