Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கையில் கொஞ்சம் காசிருந்தால் கடைசி வரைக்கும் நிம்மதி


டிசம்பர் 31-க்குப் பிறகு, இன்னும் சொல்லப்போனால் மார்ச் 31, 2017க்குப் பிறகு பண மதிப்பு நீக்க நடவடிக்கைகளின் காரணமாக எதிர்பார்க்கப்படுவது போல் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி வங்கிகளுக்குள் வராது போகுமானால் அது அரசுக்கு வருவாயாக மாறும் சூழல் ஏற்படும் என்பதால், அதனை வெற்றியாக அரசு அறிவிக்கக்கூடும். அதன் அடிப்படையில் தான் பட்ட சங்கடங்களையும் சமான்ய குடிமகன் மறந்து அரசை வாழ்த்தவும் கூடும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.


அதேநேரம், அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ரொக்கமாக, நன்கொடையாளர் குறித்த விவரங்கள் இன்றி பெறும் நன்கொடைகளுக்கு எதிரான நடவடிக்கைகள், 'ரவுண்ட் ட்ரிப்பிங்' எனப்படும் உள்நாட்டில் திரட்டப்படும் கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்நிய கரன்சிகளாக மறுபடியும், இந்தியாவிற்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் முதலீடுகளாக வருவதற்கு எதிரான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

மோடி தலைமையிலான மத்திய அரசு அதை நோக்கியே பயணிப்பதாக தெரிவதும் உண்மை. ஆனால், ரொக்கமில்லா பரிவர்த்தனை கொண்ட நாடாக மாறவேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் அறைகூவல்கள் குறித்து சற்றே எச்சரிக்கை அவசியம் என்றே தோன்றுகிறது. 2008 ஆம் ஆண்டில் 'லேமென் பிரதர்ஸ் வங்கி' திவாலான போது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிக்கப்பட்ட போது, இந்தியாவில் அது பெருத்த அளவில் உணரப்படாமல் போனமைக்கு இந்திய குடும்பங்களின் சேமிப்பே காரணம் என கூறப்பட்டது நினைவிருக்கும். 2013 ஆம் ஆண்டில் 22,124.14 பில்லியன் ரூபாய்களை இந்திய குடும்பங்கள் சேமிப்பாக கொண்டிருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


2006 ஆம் ஆண்டில் இதுவே 8,689.88 பில்லியன் ரூபாய்களாக இருந்தது என்பதையும், வருடத்திற்கு சராசரியாக 2,819.47 பில்லியன் ரூபாய்கள் இத்தகைய சேமிப்பு  அதிகரித்து வருகிறது என்பதையும் புள்ளி விவரங்களிலிருந்து அறியும்போது, பெருமிதம் உண்டாகக்கூடும். ஆனால், சமூக, வரலாற்று மற்றும் பொருளாதார பண்பாட்டு ரீதியிலான மக்களின் மனோபாவ அடிப்படையில் அமைந்த இந்த சேமிப்பு பழக்கத்திற்கு தற்போதைய வங்கிகளில் இருப்பு, அட்டைகளில் செலவழிப்பு என்கின்ற 100 சத மின்னணு பரிவர்த்தனை முறை வேட்டு வைத்துவிடுமோ என்கிற ஐயப்பாடுகள் எழுவதை தவிர்க்க இயலவில்லை. மேலும், பெருமளவிலான நுகர்வு கலாச்சாரத்தையும், அது ஏற்படுத்தி விடக்கூடும். மின்னணு பரிவர்த்தனைக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத போது, அதனை வற்புறுத்துவது தொழில் துறையில் குறிப்பாக 3 கோடி சில்லரை வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக அமையும் என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. ஃபிளிப்கார்ட், அமோசன் போன்ற அன்னிய நிறுவனங்களுக்கே இதில் அதிக பயன் இருக்கும் என்பதையும் மறுக்க இயலாது.


அது மட்டுமல்லாமல் சிறுவாட்டுக் காசாக சேமிக்கப்படும் பணத்தை வங்கிகளில் வைத்திருக்க இந்திய பெண்கள் விரும்புவது சந்தேகமே. தற்போதும் கூட, நாளது தேதி வரையில் 8.5 லட்சம் கோடி ரூபாய்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ள நிலையில், 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

இதில் 86 சதவிகிதம் அதாவது ரூ.2.21 லட்சம் கோடி உடனடியாக வங்கிகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. முழுமையான அளவிற்கு புதிய ரூபாய்கள் வெளியிடப்பட்டிருப்பின் பொதுமக்கள் 80 சதத்திற்கும் அதிகமாகவே திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பர் என்பதுதான் உண்மை. ஆனால் தற்போது உள் செலுத்தப்பட்ட தொகைக்கு ஈடான புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படமாட்டாது என்றே தெரிகிறது.


அதாவது, ரொக்க பரிவர்த்தனையை குறைக்கும் முயற்சியே இது. ஏற்கெனவே, இ-ஷாப்பிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களின் காரணமாக இயற்கையாகவே இந்தியாவில் மின்னணு பரிவர்த்தனைகள் வருடா வருடம் அதிகரித்தே வந்துள்ளதை காணும் போது, தானாக கனிவதை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க இயலவில்லை.

தற்போது 20 சதவிகிமாக இருக்கும் மின்னணு பரிவர்த்தனைகள் 50 சதத்தையும் இயற்கையாகவே தாண்டுவதற்கான வாய்ப்புக்கள் உள்ள நிலையில், ரொக்க கையிருப்புக்கு எதிரான பிரச்சாரங்களை எச்ச ரிக்கையாகவும், கவனமுடனும் கையாள வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது.

கையில் கொஞ்சம் காசு இருந்தால் மட்டுமே கடைசி வரைக்கும் நிம்மதி’ என்கிற சராசரி இந்தியனின் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டாமா?


கட்டுரையாளர் : எம்.ஜே.வாசுதேவன் 




18 கருத்துகள்

  1. கையில் காசு வைத்திருப்பதை இப்படியெல்லாம் கட்டாயம் செய்து மாற்ற முடியாது நண்பரே

    பதிலளிநீக்கு
  2. வங்கியில் செலுத்தி விட்டு கையேந்தி நிற்க சொல்கிறார்களோ ? கட்டுரை நன்று

    பதிலளிநீக்கு
  3. Sir, Zio is giving free net and everyone has changed to this. Now the government pushes everyone to cashless transactions. when Zio start to charge for internet what will happen... Also elderly people from villages, how could they use this application? Also, if they ask anybody's help for transaction, they need to disclose their details to others and others may mislead them as well. What's your opinion?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. As a journalist, Mr.Senthil sir could reply very well for my doubts. That's what I believed and asked such question. I don't know, these questions will frame me as a anti national and I am not like so... Even these questions maybe senseless, that also I don't know. Just I got these doubts in my mind and asked him... Hope this makes you to clear....

      நீக்கு
    2. As a journalist, Mr.Senthil sir could reply very well for my doubts. That's what I believed and asked such question. I don't know, these questions will frame me as a anti national and I am not like so... Even these questions maybe senseless, that also I don't know. Just I got these doubts in my mind and asked him... Hope this makes you to clear....

      நீக்கு
  4. Sir, Zio is giving free net and everyone has changed to this. Now the government pushes everyone to cashless transactions. when Zio start to charge for internet what will happen... Also elderly people from villages, how could they use this application? Also, if they ask anybody's help for transaction, they need to disclose their details to others and others may mislead them as well. What's your opinion?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இன்னொன்று கேஷ்லெஸ் பரிமாற்றத்துக்கு அவ்வளவாக டேட்டாவும் தேவைப்படாது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  5. அருமையான கட்டுரை...
    கட்டுரையாளருக்கும் பதிந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை