Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வலைப்பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி 2016

நண்பர் பரிசை செ.குமாரின் 'மனசு' தளத்தில் இந்த அறிவிப்பை பார்த்ததும் மனம் மகிழ்ச்சிக் கொண்டேன். சிறுகதைக்கான ஒரு போட்டி  என்பது வலைப்பதிவர்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல், பிண்ணி பெடலெடுத்துவிடுவார்கள். சும்மாவே சிறுகதையில் கலக்கும் பதிவர்களுக்கு கரும்பு தின்ன கூலி கிடைக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளுங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.!

எனக்கும் கதைக்கும் வெகு தூரம் என்பதால் போட்டியில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கிறேன். 

வாழ்த்துகள்!


போட்டியின் விவரம் கீழே...


வெட்டிபிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப் போட்டி 2016



வணக்கம் வலைப்பதிவர்களே....

வெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....!! வெல்லுங்கள்.....!!!


 ********************************************

பரிசுத் தொகை 

முதல் பரிசு ரூ 8000 

இரண்டாம் பரிசு ரூ 5000 

மூன்றாம் பரிசு ரூ 2500 

சிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு 

********************************************

விதிமுறைகள். 

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது) 

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம். 

3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும் 

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்.. 

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது. 

7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில்  மட்டுமே அனுப்பவும். 

********************************************

கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள் 

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும். 

· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 

· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது 

· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது. 

·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் 

********************************************
நடுவர்கள்:

முதல் சுற்று: 

செங்கோவி 

பால கணேஷ்

குடந்தை RV சரவணன் 

சதீஷ் செல்லத்துரை 

ரஹீம் கஸாலி 

வீடு சுரேஷ்குமார் 

AG சிவகுமார் (மெட்ராஸ்பவன்)

(ஆனந்த விஜயராகவன்) கோவை ஆவி

தமிழ்வாசி பிரகாஷ்

அரசன் 


இரண்டாம் சுற்று: 

பிச்சைக்காரன் 

ராஜ ராஜேந்திரன் 

கார்த்திக் புகழேந்தி 


இறுதிச் சுற்று: 

வா.மு. கோமு 

செல்லமுத்து குப்புசாமி

********************************************
ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.

படைப்பாளர்களுக்கு வாழ்த்துகள்!


18 கருத்துகள்

  1. //நடுவர்களுக்கே யார் எழுதியது எனத் தெரிவிக்கப்பட மாட்டாது// - அடேங்கப்பா!!

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. வாழ்த்துகள் பங்கு கொள்ளும் அனைவருக்கும், வெற்றி பெற இருப்பவர்களுக்கும்! நடத்துபவர்களுக்கும் வாழ்த்துகள்!

    //நடுவர்களுக்கே யார் எழுதியது எனத் தெரிவிக்கப்பட மாட்டாது// இத இதத்தான் நாங்கள் அடிக்கடிச் சொல்லுவது. மிக மிக நல்லதொரு விசயம்.

    மனசு குமாரும் எழுதிருக்கிறார் முன்பும் சொல்லியிருந்தார் பார்த்தோம்..

    தகவலுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  3. போட்டி சிறக்க வாழ்த்துகள் ...
    முடிந்தால் பங்கேற்கிறேன் போட்டியில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. தகவலுக்கு நன்றி! வாக்கு வரிசைஎண் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. அறிவிப்பாளர்களுக்கும், பகிர்ந்தோருக்கும் நன்றி. கலந்துகொள்வோருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  7. நடுவர்கள் யாவரும் நண்பர்களே! கலந்து கொல்லப் போகிறவர்களுக்கு.... மன்னிக்கவும்... கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கு வாழ்த்துகள்.

    வோட்டுப் போட்டாச்சு அண்ணாச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. பங்கிடுவோர்களுக்கு எமது வாழ்த்துகள் தகவலுக்கு நன்றி எனக்கு தூரம் நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
  9. நன்றி... கலந்துகொண்டு கலக்குவோம் மச்சான்ஸ்...

    பதிலளிநீக்கு
  10. போட்டிக்கான அறிவிப்பை என் தளத்தின் மூலமாக அறிந்து அதை அழகிய பகிர்வாக்கிய தங்களுக்கு நன்றி சார்...

    நீங்களும் எழுதுங்க...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை