Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சீதனமாக வந்த நகரம்

ந்தியாவின் மிகப் பெரிய நகரம். வர்த்தகத்தின் தலைநகரம். உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாவது பெரிய நகரம் என்று ஏகப்பட்ட பெருமைக்கு சொந்தமானது இந்த மும்பை நகரம். இந்த நகரம் பிரிட்டனுக்கு சீதனமாக கொடுக்கப்பட்ட ஒரு நகரம் என்றால் நம்பமுடிகிறதா? வேறுவழியில்லை, நம்பித்தான் ஆகவேண்டும்.  

இந்தியா கேட்
'மும்பை' என்ற பெயர் 'மும்பா தேவி' என்ற பெண் தெய்வத்தின் பெயரில் இருந்து வந்தது. மராத்திய மொழியில் 'அய்' என்பது அம்மாவைக் குறிக்கும். 'மும்பா அம்மா' என்பதை மராத்திய மொழியில் அவர்கள் மும்பை என்று அழைத்தார்கள். 16-ம் நூற்றாண்டில் மும்பையைக் கைப்பற்றிய போர்த்துக்கிசீயர்கள் 'பொம்-பே' என்று அழைத்தார்கள். போர்த்துக்கிசீய வார்த்தையான 'பொம்' என்பது 'நல்ல' என்று அர்த்தத்தை தரும். 'பே' என்பது வளைகுடாவைக் குறிக்கும். நல்ல வளைகுடா என்பதை அவர்கள் 'பொம்பே' என்று அழைத்தார்கள். 

தாஜ் ஹோட்டல்
மும்பை என்பது 7 தீவுகளின் தொகுதி. மும்பை, பரேல், மச்சாகாவ், மாகிம், கொலாபா, வோர்லி, ஓல்டு வுமன் என்ற இந்த ஏழு தீவுகளில் பெரியது மும்பைதான். இது பெரும் பாரம்பரிய வரலாறு கொண்ட நகரம். மகத பேரரசரான அசோகர் மும்பையை ஆட்சி செய்திருக்கிறார். கி.பி.150-ல்  கிரேக்கத்தின் புவி ஆய்வாளரான தலாமியா இதனை 'ஏழு தீவுகளின் கூட்டம்' (ஹெப்டானீசியா) என்று அழைத்தார். அதன்பின் பல ஆட்சியாளர்கள் மும்பையை ஆண்டனர். கி.பி.1348-ல் குஜராத் முஸ்லிம் ஆட்சியாளர்கள் இந்த தீவுகளை அவர்களுடன் சேர்த்துக் கொண்டார்கள். கிட்டத்தட்ட கி.பி.1494 வரை குஜராத் சுல்தான்களுக்கும், பாமினி சுல்தான்களுக்கும் இந்த தீவுகளுக்கு உரிமை கொண்டாடி போர் நடந்தன. 

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
அதனைத் தொடர்ந்து கடற் கொள்ளையர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கி.பி.1534 டிசம்பர் 24-ல் போர்ச்சுகிசீயர்கள் குடியேற்றமும் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் பேசின் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்ள கட்டாயப்படுத்தினர். அதன்படி 7 தீவுகளும், அருகில் இருந்த மூலோபாயா நகரமும் போர்ச்சுகிசீயர்களுக்கு கொடுக்கப்பட்டது. அவர்கள் அங்கு ரோமன் கத்தோலிக்க மதத்தை பரப்புவதில் ஆர்வமாக இருந்தனர். அதற்காக பல தேவாலயங்களை உருவாக்கினார்கள். 

தீவுகளை இணைக்கும் பாலம்
இந்த நிலையில் கி.பி.1661-ம் ஆண்டு மே மாதத்தில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸுக்கும், போர்ச்சுக்கலின் அரசர் நான்காம் ஜானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் இந்த 7 தீவுகளும் வரதட்சணையாக சார்லஸுக்கு போர்ச்சுக்கல் மன்னர் வழங்கினார். இப்படிதான் மும்பை பிரிட்டீஷார் கைகளுக்கு வந்தது. 

கி.பி.1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு 10 பவுண்ட் என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த தீவுகளை ஏலத்தில் எடுத்து கொண்டது.  கி.பி.1661-ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை கி.பி.1675-ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது.கி.பி.1687-ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து மும்பைக்கு மாற்றியது. 

வேல்ஸ் அருங்காட்சியகம்
இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது. மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது. அதன்பின் கி.பி.1869-ல் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது. அதன்பின் அதன் வளர்ச்சி தங்குதடையில்லாமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது.  

துறைமுகம்


25 கருத்துகள்

  1. இன்றைய மும்பை பற்றிய மிக அருமையான சரித்திரத்தகவல்களை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.

    இதில் சுட்டிக்காட்டியுள்ள படங்களான இந்தியா கேட், தாஜ் ஹோட்டல், துறைமுகம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் (பழைய பெயர் V.T. அல்லது விக்டோரியா டெர்மினல்ஸ் என நினைக்கிறேன்) ஆகிய பகுதிகளுக்கு ஓரிரு முறை நான் நேரில் சென்று வந்துள்ளதால் மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் முந்தைய பெயர் வி.டி. தான். இந்தப் பதிவின் மூலம் மீண்டும் அந்த இடங்கள் தங்கள் நினைவுக்கு வந்தது கண்டு மகிழ்ச்சி. தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. நல்ல தகரவல்கள்தான் நண்பரே 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தெரிந்த நீங்கள் 15-ஆம் நூற்றாண்டில் எங்கள் மூதாதையர் வசம் இருந்ததை மறந்து விட்டீர்கள்

    பரவாயில்லை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில் இருக்கின்றேன் வீடு தீப்பிடித்தபோது எல்லாம் அழிந்து விட்டது
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இளவரசரே நீங்கள்தானே நண்பரே, உங்களுக்கு சீதனமாக வந்ததுதான் மும்பை. எல்லாம் இரண்டு ஜென்மத்துக்கு முன்னாள் நடந்த கதை. பரவாயில்லை இப்போதும் சவூதி இளவரசராகத்தானே இருக்கிறீர்கள்..!

      நீக்கு
  3. அறியாத செய்தி
    வியப்பிற்குரிய செய்தி நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. அறியாத தகவல்கள்!அறிந்தேன்! நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  5. தாங்கள் சொல்லும் தகவல்படி பார்த்தால். நம்பித்தான் ஆகவேண்டும்..

    பதிலளிநீக்கு
  6. அறியாத செய்தி...
    அறிமுகம் தந்தமைக்கு
    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. ஏற்கனவே சில தகவல்கள் அறிந்திருந்தாலும் மீண்டும் அந்தப் பெயர்களை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ள உதவியது உங்கள் பதிவு. நல்ல தகவல்கள். மிக்க நன்றி பகிர்விற்கு....

    பதிலளிநீக்கு
  8. எங்கேயோ கட்டப்பட்ட சூயஸ் கால்வாய் மும்பை வளர்ச்சிக்கு வழிகோலியது என்றால் ,சேது கால்வாய் திட்டம் நிறைவேற்றப் பட்டால் தமிழகத்துக்கு எவ்வளவு நன்மை பயக்கும் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக பெரும் வளர்ச்சி பெறும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால், மதம் சம்பந்தமான பிரச்சனையால் அது கிடப்பில் கிடக்கிறது. மதத்தைக் கடந்து இன்னொரு பாதிப்பும் அதில் இருக்கிறது. கோடிக்கணக்கான வருடங்களாக உருவான பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பவளப்பாறைகள் பாதித்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும். அந்த பாதிப்பு ஏற்படாமல் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் நல்லது.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  9. நூற்றாண்டு கால வரலாற்றை சுருக்கமாக, அருமையாகப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. மும்பை பற்றி அறியாத தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. மும்பையைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புச் செய்திகளை அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி! பயனுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை