Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மூளையை குறைவாக பயன்படுத்தும் பெண்கள்

னித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை. மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது. கனவு வந்தால் மூளை விழிப்புடன் இருப்பதாக நம்பப்படுவது தவறான தகவலே. கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை. அப்படி அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.  


நமது மூளைக்கு வருங்காலத்தை அறியும் திறன் இருக்கிறது. பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அவற்றை கனவுகளாக நமக்கு உணரவைக்கவும் அவை தவறுவதில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கிறது. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை. மனித மூளையால் வருங்காலத்தை கணிக்க முடியும் என்று விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என இரண்டுமே ஒப்புக் கொண்டுள்ளது. அது இப்போது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 


 நடுப்பகுதி மூளையில் உள்ள 'டோபமைன்' என்ற அமைப்பு நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை தந்துகொண்டே இருக்கும் என்றும் இதுதான் நாம் சில செயல்களை செய்யும்போது தடுக்கிறது என்றும், ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது என்றும் அதையும் மீறி அந்தக் காரியத்தை செய்யும் போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்று கூறுகிறார்கள். இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் சொல்கிறார்கள். 


பெண்கள் மூளையை குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு  முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள். 

உடலில் எந்த இடத்தில் ஒரு சிறு காயம் பட்டால் கூட உடனே தெரிவிக்கும் மூளை தனக்கு வலி ஏற்பட்டால் மட்டும் அதை தெரிவிப்பதில்லை. ஏனென்றால் மூளையிடம் வலி உணர்விகள் கிடையாது. அவற்றுக்கான இடமும் மூளையில் இல்லை.  


மூளையின் அளவுகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அறிவுத்திறனில் இது முக்கிய பங்களிக்கிறது. மூளையின் அளவு பெரிதாக இருப்பவர்கள் ஒரு பிரச்னைக்கு மிக நல்ல தீர்வு காண்பார்கள் என்றும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். 

மூளைதான் மனித உடலிலே அதிக அளவு சக்தியை எடுத்துக்கொள்ளும் அங்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


14 கருத்துகள்

  1. அறியாத பல செய்திகளை அறிந்தேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நண்பரே,

    மூளை தொடர்பான பதிவுக்கு ஏனிந்த பொருந்தாத தலைப்பு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருந்தாத தலைப்பு அல்ல. உண்மையான தலைப்புதான். உயிரினங்களின் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் பலமும் உண்டு. பலவீனமும் உண்டு. இது பெண்களுக்கான மிகச் சிறிய பலவீனம் என்று சொல்லலாம்.. அவ்வளவுதான். ஆண்களுக்கான பலவீனங்களை ஏற்கனவே நிறைய பதிவுகளில் தெரிவித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை இருபாலினத்தையும் ஏன் மூன்றாம் பாலினத்தவரையும் கூட ஒரே விதமாகவே பார்க்கிறேன். ஆனாலும் தங்கள் மனதில் ஏற்பட்ட நெருடலை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. மூளைப் பற்றிய தகவல் தொகுப்பு அருமை ஐயா.நேரம் பயனுள்ளதாக அமைந்தது நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. இதுவரை அறிந்திராத தகவல். புதிய புதிய தகவல்களை தங்கள் மூலம் அறியமுடிகிறது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மூளையைப் பற்றி அரிய செய்திகள். மூளையைக் கசக்கிக்கொண்டு மனதில் பதியும் வகையில் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

    பதிலளிநீக்கு
  7. நல்ல தகவல்கள் சகோ. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அதாவது தலைப்பைச் சொல்கின்றேன். என்றாலும் பெண்கள் மூளையை அதிகமாக உபயோகிப்பதில்லை என்பது அவர்கள் கொஞ்சம் எமோஷனல் பார்ட்டை அதிகமாக உபயோகிப்பதால் இருக்கும். அவர்களுக்கு எவ்வளவோ கவலைகள் பொறுப்புகள்.... பெண்களுக்கு அறிவுத் திறன் கூடுதல் இல்லையோ அதாவது ஆராயும் திறன் ஒரு சில விஷயங்களில்...சரி சரி நம் நண்பர்கள் மதுரைத் தமிழன் மற்றும் விசுவிடம் கேட்டால் சொல்லுவார்கள் இதற்குப் பதில்ப..ஹஹஹஹ்

    சரி அதை விடுங்கள் கீதாவின் மூளையையே காணவில்லை அப்புறம் என்ன சொல்ல...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆணுக்கும் பெண்ணுக்கும் சம அளவு மூளை (1400g Or 1.4kg) தான். ஆனால், எங்கட முன்னோர் 'பெண் புத்தி பின் புத்தி' என ஆண், பெண் வேறுபாட்டை உருவாக்கியதன் விளைவே இத்தனை ஆய்வுகள்.

    பால் வேறுபாட்டுக்கும் மூளையைப் பாவிக்கும் ஆற்றலுக்கும் தொடர்பில்லை என்பதே, எனது கருத்து. சில ஆண்கள் அதிகம் மூளையைப் பாவிக்கலாம். அதே போல பெண்களும் அதிகம் மூளையைப் பாவிக்கவில்லை என்பதற்கு சான்றில்லை. ஏனெனில், ஆண்களைப் போலப் பெண்களும் அறிஞர்களாகவோ தலைவர்களாகவோ இருக்கிறார்களே!

    முடிவாகச் சொல்வதானால் பால் வேறுபாடு இன்றி எவரும் மூளையைப் பாவிக்கலாம்; பாவிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. பெண்கள் யாரும் சண்டைக்கு வரவில்லையா ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை