Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு


ரு கல்லூரி நிர்வாகம், தனது ஊழியர்கள் மூலமாக கிட்டத்தட்ட ரூ.8 கோடி கருப்பு பணத்தை மாற்ற முயற்சித்தது, தேசமெங்கும் ஜன்தன் யோஜனா சேமிப்புக் கணக்குகளில் ரூ.64,000 கோடி அளவுக்கு திடீரென டெபாசிட்டுகள் குவிந்திருப்பது என்கிற செய்திகளோடு, ரூ. 5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் தருகிறோம், அதனை புதிய ரூபாயாக  மாற்றிக் கொடுங்கள் என தனிப்பட்ட நபர்களிடமும்  லட்சக்கணக்கான ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கிக் கொள்வதாகவும், அதற்கு பழைய ரூ.500, 1000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறு வணிக நிறுவனங்களை பலரும் கேட்டுக் கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருவதும், ரூ.500, 1000 செல்லாதென அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் கருப்பு பணத்தின் மீதான அடி பலமாக விழுந்துள்ளது என்பதையும், அதன் அடிப்படையில் கடுமையான வலியை பலரும் உணர்வதையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

இது பிரதமர் மோடியின் இந்த திட்டத்திற்கான வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியும் என்றாலும், இதைவிடவும் அதிகமான வலியுடன் நாடெங்கும் சாதாரண பொதுமக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் வாசல்களில் தங்களது சொந்தப்பணத்தை மாற்றுவதற்காக பல மணி நேரம் நிற்கும் நிலை தொடர்வதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


தமிழகத்தில் இன்னும் 500 ரூபாய் புதிய நோட்டுகள் பரவலாக வழங்கப்படாத நிலையில், பணப்புழக்கத்தில் பெரும் தேக்கம் தொடர் கதையாகியுள்ளது.  அதேநேரம், 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 500, 1000 ருபாய் நோட்டுகள் செல்லாதென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகாறும் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பழைய நோட்டுகளே வங்கிகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிச.31 ஆம் தேதி வரையில் வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என்கிற நிலை இருப்பினும், இனி வரப்போகும் தொகை என்பது பெரும்பாலும் கருப்பு பணமாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறபோது, அவை வங்கிகளுக்குள் வராமலே போய்விடக்கூடும். ஆனால், மத்திய அரசு கூடுமான வரையில்  மேலதிக பணம் வங்கிகளுக்குள் வருவதையே விரும்புவதாகத் தெரிகிறது. 

ரூபாய் இரண்டரை லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்தால் வருமான வரி மற்றும் 200 சதவிகித பெனால்டி விதிக்கப்படும் என்கிற வரித்துறையின் அறிவிப்பின் காரணமாக, பதுங்கியிருக்கும்  கருப்பு பணத்தில் மிகப்பெரும் பகுதி இன்னும் வெளிவராத சூழல் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்தம்.

இந்நிலையில், கடந்த செப்.30 ஆம் தேதியுடன் முடிவடைந்த கருப்பு பணத்தை தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தை மறுபடியும் செயல்படுத்துவது தற்போதைய சூழலில் மிகு பலன்களைக் கொடுப்பதாக அமையக்கூடும்.


கிட்டத்தட்ட 60 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் அத்திட்டத்திட்டத்தின்கீழ் வெளிக்கொணரப்பட்டு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வரி வருவாய் கிடைத்துள்ள நிலையில், தற்போது மறுபடியும் அத்திட்டத்தை அறிமுகப்படுத்தி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை அதன் கீழ் டெபாசிட்  செய்து வைப்பதன் மூலம் பெருமளவு பணம் வெள்ளையாக மாறும் வாய்ப்பு ஏற்படக்கூடும். மத்திய அரசும் கூட அவ்வாறாக சிந்திப்பதாகவே செய்திகள் வெளியாகியுள்ளன.

கிட்டத்தட்ட 50 சதவிகிதத்தை வரியாக எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை நான்கு வருடங்களுக்கு வங்கியிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூடிய வரைவு திட்டம் ஒன்றை அரசு வகுத்து வருவதாக கூறப்படுவது உண்மையயனில் அது வரவேற்கத்தக்கதே. சாதாரண பொதுமக்கள் மிகப்பெரும் அளவில் கடுமையான சங்கடங்களை இதுகாறும் சந்தித்து வந்துள்ள நிலையில், கருப்பு பணம் அனைத்தும் முழுமையாக வங்கிகளுக்குள் வருவதை உறுதிப்படுத்துவது மட்டுமே அதற்கான ஆறுதல் அளிக்கும் விசயமாக அமையக்கூடும்.

இதன் மூலம் அரசுக்கு வருமான வரி வகையில் வருவாய் கிடைக்கும் என்பதோடு, வங்கிகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும். நாளடைவில் சாதாரண பொதுமக்கள் தங்களது பணத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, மீட்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வங்கிகளிடத்திலேயே இருக்கும் என்பதால் வரும் நாட்களில் வங்கிக் கடன் விகிதங்கள் குறையும் என எதிர்பார்க்க முடியும்.

அதன் அடிப்படையில், சந்தையில் நுகர்வுத் தன்மை அதிகரிக்கும் என்பதோடு, தொழில்துறைக்கான குறைந்த வட்டி கொண்ட கடன் வசதி அதிகரிக்கும் என்பதால், புதிய வேலை வாய்ப்புகள் பெருகுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

இதன் மூலம் ரூபாய் நோட்டு செல்லாததென அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை அடுத்த நிதியாண்டின் துவக்கத்திலாவது நல்ல நிலைக்கு மாற வழி வகை ஏற்படும் என்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவிற்கு அதிகரிக்கும் என்றே நம்புவதற்கு இடமுண்டு.

வழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு என்கிற கோசத்தில் சத்து இருப்பதாகவே தெரிகிறது.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 



14 கருத்துகள்

  1. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு கட்டுரை. இங்கேயும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஏழை மக்கள் படும் துயர்தான் அதிகம்

    பதிலளிநீக்கு
  4. பெட்ரோல் டீசல் விலை, பாகிஸ்தானில் விற்கும் அளவுக்காவது குறையுமானால் இந்த திட்டம் வெற்றி பெற்றதாக கருதலாம் ,நடக்குமா :)

    பதிலளிநீக்கு
  5. படிக்கும்போது நன்றாகத்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  6. Black money not remitted to banks also an income to government because the excess of new currency notes will stay with govt. Hence this move is help the black money hoarders.. What do you think???

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி! அரசு அசையும் மற்றும் அசையா சொத்துக்களாக மாற்றப்பட்டுள்ள கறுப்பு பணத்தை கையகப்படுத்தினாலொழிய அரசின் நோக்கம் நிறைவேறாது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை