Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கடற்கரை நகரம்


ஆந்திரப்பிரதேசம் - விசாகப்பட்டணம்

வ்வொரு வருடமும் புயலால் அடித்து நொறுக்கப்படும் ஒரு நகரம்தான் விசாகப்பட்டணம். வருடம் தவறாமல் பெரும் புயல்கள் வந்து இங்கு நலம் விசாரித்துப் போகின்றன. எத்தனை முறை புயல்கள் நகரை துவம்சம் பண்ணினாலும் அதிலிருந்து உடனே மீண்டு விடுகிறது. தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது, இந்த நகரம்.

கைலாசகிரி

விசாகப்பட்டணம் சுற்றுலாவுக்கும் சிறந்த இடம். ஆந்திராவில் இரண்டாவது பெரிய நகரம் இதுதான். மற்ற நகரங்களைவிட அழகான கடற்கரைகளையும், மலைவாசஸ்தலங்களையும் கொண்ட நகரம். அதோடு சுவையான உணவும் கிடைக்கக்கூடிய இடம்.

இங்கிருக்கும் ராமகிருஷ்ணா கடற்கரை நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை. இங்கு உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் விருப்பத்தோடு வருகிறார்கள். 'யாரடா' மற்றும் 'கங்காஹம்' கடற்கரைகள் கொஞ்ச தூரத்தில் இருக்கின்றன. கூட்டம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இரண்டு கடற்கரைகளும் அற்புதமான பிக்னிக் ஸ்பாட்.


விசாகப்பட்டணம் அருகில் உள்ள 'கொண்டா எரி' நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம். சுற்றுலாப்பயணிகள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விசாகப்பட்டணக் கடற்கரைகள் நீந்துவதற்கு ஏற்றதல்ல. ஆபத்தானது. பாதுகாப்பற்றது. வழிகாட்டிகளின் ஆலோசனைப்படி செயல்படுவதே நல்லது. அருகில் உள்ள ஹில் ஸ்டேஷ­னான கைலாசகிரிக்கு சென்று கேபிள் காரில் போவதன் மூலம் நகரின் அழகையும் கடற்கரைகளையும் பறவை பார்வையில் பார்க்கலாம்.

பறவை பார்வையில் விசாகப்பட்டணம் கடற்கரை

விசாகப்பட்டணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் 'பவிகொண்டா' என்ற இடத்தில் பழமையான புத்த வளாகத்தைப் பார்க்கலாம்.

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 600 கி.மீ. தொலைவில் விசாகப்பட்டணம் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் பலவும் விசாகப்பட்டணத்துடன் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் இணைந்துள்ளது.

எங்கு தங்குவது?


'தி பார்க் (0891-3045678) ஹோட்டல்' தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்கக் கட்டணம் ரூ.9000.




===

1 கருத்துகள்

  1. அழகான படங்களுடன் எப்படிப்போவது? எங்கு தங்குவது மேலும் கடல் நீந்துவதற்கு ஏற்றதல்ல என்பதையும் சரியாகச்சொல்லியிருக்கிங்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை