Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

நாட்டுக்காக உடல் கொடுத்த பெண்கள்



னித இனத்தின் புனிதம் என்று சொல்லப்படும் பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை இன்னல்கள். இன்றைக்கு வேண்டுமானால் அவர்கள் சம உரிமை பெற்றிருக்கலாம். ஆனால், சரித்திர காலங்களில் பெண்கள் விலங்குகளை விட கேவலமாக நடத்தப் பட்டிருக்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணம்தான் 'கம்போர்ட் பெண்கள்'.

போர்க்களத்தில் கம்போர்ட் பெண்
பொதுவாக வருடங்கள் பல உருண்டோடும் போது எப்படிப்பட்ட பெரிய பிரச்சனையும் மறைந்து போய்விடும் என்பது நடைமுறை உண்மை. ஆனால், 50 வருடங்களுக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது என்றால் நம்புவது சிரமம்தான்.

2002-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி நடைபெறும் நாடுகளாக ஜப்பானும் தென் கொரியாவும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் இணைந்து போட்டிகளை நடத்தின.

ஜப்பானும் தென் கொரியாவும், இந்தியா - பாகிஸ்தான் போல,  உள்ளுக்குள் பகையை வளர்த்துக் கொண்டு வெளியில் நட்பை பாராட்டிக் கொள்ளும் நாடுகள்.

போட்டிக்கான முன் ஏற்பாடுகள் இரண்டு நாடுகளிலும் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது தென் கொரியா தொலைக்காட்சி ஒன்று ஒரு விபரீதமான பேட்டியை ஒளிபரப்பியது. அந்த பேட்டி கிட்டத்தட்ட 50 வருடங்களாக அமுங்கிக்கிடந்த பிரச்சனையை, தடாலென்று விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்தது.

கிம் சாங் ஹீ என்ற 75 வயது பெண் கொடுத்த பேட்டி தான் கொரியர்களை கொதிக்க வைத்தது. இரண்டாம் உலகப்  போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது நடந்த சம்பவம் அது.

அப்போது கிம் 20 வயதுகூட எட்டாத கன்னிப் பெண். சீனாவை ஜப்பான் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்த காலம். தொடர்ந்து போர்க்களத்தில் இருந்து வெடிகுண்டுகளையும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் போர் விமானங்களையும் பார்த்து பார்த்து அலுத்துப்போய் களைப்படைந்த ராணுவ வீரர்களுக்கு.. உடலும் மனசும் வேறொரு இன்பத்துக்காக ஏங்கியது. அதை ஏக்கம் என்று சொல்வதைவிட வெறி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அது பெண்ணுக்கான ஏக்கம்.

மாதக் கணக்கில் பெண் வாடையே இல்லாமல் போர்க்களத்தில் போரிடும் ராணுவ வீரனுக்கு ஒரு பெண்ணை இனிமையாக அணுகத் தெரியாது. மென்மையாக அவளை இன்ப உலகத்துக்கு அழைத்து செல்ல தெரியாது. அவனுக்கு இருப்பதெல்லாம் காமவெறி ஒன்றுதான். அதனால் அவனுடன் கூடுதல் பெண்ணுக்கு வலி நிறைந்த கொடூரமாகத்தான் இருக்கும்.

ராணுவமுகாமுக்கு செல்லும் கம்போர்ட் பெண்கள்
தொடர்ந்து போர்க்களத்திலேயே இருந்த இப்படிப்பட்ட போர் வீரர்களின் உடல் பசியைத் தீர்த்து வைக்க பெண்கள் தேவைப்பட்டார்கள். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதற்கு ஏற்ப விலைமாதர்களும் இல்லை. அதனால் ராணுவத்துக்கு வேறு வழி தெரியவில்லை. இளம் பெண்களை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு வந்தார்கள்.

ஜப்பான் நாட்டு ராணுவ வீரர்களுக்கு கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ்  நாட்டுப் பெண்கள் விருந்தாக்கப்பட்டார்கள். இப்படி கடத்தப்பட்ட பெண்களும் ராணுவ வீரர்களைவிட குறைவாகவே இருந்தார்கள்.

ராணுவமுகாமில் கம்போர்ட் பெண்கள்
அழகான, இளமை நிறைந்த, பயந்து நடுங்கும் குடும்ப பெண்களைப் பார்த்ததும் வெறி இன்னும் உச்சத்தை அடைந்தது. பல பெண்கள் ஓய்வு இல்லாமல் வேறு வேறு ராணுவ வீரர்களுடன் உறவு கொண்டனர்.

உயிரிழந்த பெண்களின் உடல்கள்
மென்மையும், பலவீனமும் நிறைந்த பல பெண்கள் வெறித்தனமான இந்த பலாத்காரத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரிழந்தனர். அப்படியும் கூட விடாமல் பிணத்தைக் கற்பழித்த கொடூரமும் நடந்திருக்கிறது. இப்படி ராணுவ வீரர்களுக்காக உடலைக் கொடுத்த பெண்களுக்கு 'கம்போர்ட் உமன்' என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் சொல்வதென்றால் 'ஆறுதலளிக்கும் பெண்கள்'.

ராணுவத்தினரால் கர்ப்பிணியான பெண்
ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் அளித்த இந்த பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4 லட்சத்து 10 ஆயிரம் என்கிறது சீன அரசு. அந்த கம்போர்ட் பெண்களில் ஒருவர்தான் கிம் சாங் ஹீ. அந்தப் பெண் தொலைக்காட்சி பேட்டியில், "எங்களின் வாழ்வை சூறையாடியதற்காக ஜப்பானிய அரசு எங்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும். அதுமட்டுமல்ல, ஜப்பான் பிரதமர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

நிர்வாண சித்ரவதை
ஆனால், ஜப்பான் அரசு கம்போர்ட் பெண்களை ஒரு புழுவைப் போல்தான் பார்த்தது. நம்மூரில் இருப்பது போல வில்லங்கமான அரசியல்வாதிகள் ஜப்பானிலும் உண்டு. அதில் ஒரு அதிகப்பிரசங்கி அரசியல்வாதி ஒருவர் எல்லோரையும்விட ஒருபடி மேலே போய், "நான் அந்தப் பெண்ணை ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் கொடுத்த சுகத்திற்கு பதிலாக உங்களுக்கு பணம் தரப்பட்டதல்லவா..! அதோடு அது உங்களுக்கும் சுகமான அனுபவம்தானே..!" என்று பொறுப்புணர்வு இல்லாமல் டி.வி.யில் பேட்டி கொடுத்துவிட.. பற்றிக்கொண்டது. 

கம்போர்ட் பெண்கள் கொதித்துப் போய் நடுரோட்டிற்கே வந்து போராடத் தொடங்கினார்கள். கதறி அழுதார்கள். "அன்பு, பாசம், காதல் கனிந்த கனிவான பேச்சு, இவைகள்தான் ஒரு பெண்ணுக்கு ஆணுடன் கூடும்போது இன்பத்தை தருமே தவிர, வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் பலாத்காரத்தில் இன்பம் இருக்காது. வேதனையே மிதமிஞ்சி இருக்கும். இதை அறியாமல் பேசும் அந்த அரசியல்வாதி ஆணாதிக்கத்தின் ஒட்டுமொத்த உருவம்" என்று கம்போர்ட் பெண்கள் காச்சி எடுத்தார்கள். 

போராட்டத்தில் கம்போர்ட் பெண்கள்
தங்களை விலைமாதர்களைப் போல் குறிப்பிட்டதை கம்போர்ட் பெண்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. "போர்க்களத்தில் எங்கள் உடலை சின்னாபின்னப் படுத்தினீர்கள். இப்போது 50 வருடங்கள் கழித்து எங்கள் ஆன்மாவை சிதைக்கிறீர்கள்" என்று வெடித்தார்கள். 

ஜப்பானிய மக்களே தங்கள் அரசு அந்தப் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்களுக்கான நஷ்டஈடு கொடுப்பதுதான் முறை என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். 

மிகப் பெரும் தயக்கத்திற்குப் பிறகு ஜப்பானிய பிரதமர் அந்தப் பெண்களிடம் பொது மன்னிப்பு கேட்டார். "பெண்கள் சரித்திரத்திலேயே இரண்டாம் உலகப் போர் காலக்கட்டம் தான் மிக மோசமானது. அப்போது அவர்கள் அடைந்த அவமானம்  வேறு எப்போதும் ஏற்பட்டதில்லை" என்றும் கூறி மனம் வருந்தினார். பின்னர் அவர்களுக்கான நஷ்டஈடு வழங்கப் பட்டது.

எந்தப் பிரச்சனையுமே முழுவதுமாக மறைந்து போய்விடுவதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதை உலகுக்கு உணர வைத்தது இந்த கம்போர்ட் பெண்களின் போராட்டம்.




42 கருத்துகள்

  1. அடப்படுபாவிகளா...

    இந்த அவமானம் என்றும் அழியாது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பெண்களின் சாபம்தான் ஜப்பானை சுனாமியாகவும் நிலநடுக்கமாகவும் மாறி மாறி வந்து ஆட்டிப் படைக்கிறதோ என்னவோ..!

      வருகை தந்து வாக்களித்ததற்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. ஜப்பானின் மண் ஆசையால் இன்னும் என்ன என்ன கொடுமைகள் நடந்ததோ ?இதன் பலன்தான் அந்த நாட்டின் மீது அணு குண்டு விழுந்ததோ என்று எண்ணத தோன்றுகிறது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மங்கோலிய இனமக்கள் வாழும் நாடுகளில் மிக வலிமையாகவும் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாடு ஜப்பான்தான். ஐந்து நாட்டுப் பெண்களின் வயிற்றெரிச்சலுக்கு காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்.

      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. இப்படியும் ஒரு கொடூரமா
    நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் பல கொடுமைகள் நடந்திருக்கிறது நண்பரே! நிறைய எழுதியிருக்கிறேன். அவ்வப்போது பதிவிடுகிறேன்.

      வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  4. அறியாத விடயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி நண்பரே...
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
  5. என்ன கொடுமை! படிக்கவே நெஞ்சம் வெடிக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பெரிய கொடுமைதான் அய்யா!

      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  6. நாட்டைக் காக்கும் வேலியே
    வீட்டு பயிரை மேயும் கொடுமை!

    இச்சைக்காக கச்சையை அவிழ்க்கும் கயவர்களை
    கொச்சையாக திட்ட வேண்டும்-இந்த
    எச்சில் பிறவிகளை!
    "கம்போர்ட் பெண்கள்"
    உள்ளத்தை உறைய வைத்த
    உணமை பதிவு!
    சிறப்பு நண்பரே!
    த ம 7
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாட்டைக் காக்கும் வேலியே
      வீட்டு பயிரை மேயும் கொடுமை!//

      உண்மையான வார்த்தைகள்.

      கவிதைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  7. "ராணுவ வீரர்களுக்காக உடலைக் கொடுத்த பெண்களுக்கு 'கம்போர்ட் உமன்' என்று பெயர் கொடுத்தார்கள். தமிழில் சொல்வதென்றால் 'ஆறுதலளிக்கும் பெண்கள்'." என்ற துயரக் கதை தொடரக்கூடாது ஐயா!

    தங்கள் தளத்தில் இணைந்தாச்சு
    இனிவரும் புதிய பதிவுகளில் என் கருத்தை வெளிப்படுத்த வருவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது வலைதளத்திற்கு முதல் வருகைதந்து கருத்திட்ட நண்பருக்கு நன்றிகள்.

      தொடர்ந்து வாருங்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்

      நீக்கு
  8. மறக்கக்கூடியதா....இந்த அவமானம்???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறக்க முடியாதது தான் நண்பரே!

      தளத்தில் இணைந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள் தொடர்கிறேன்.

      நீக்கு
  9. ஆங்கில இதழ்களில் இப்பொருண்மை தொடர்பாக கட்டுரைகள் படித்துள்ளேன். ஆனால் முதன்முதலாக தமிழில் உணர்வுகள் வெளிப்படும் வகையில் மனதை அதிகம் பாதித்த நிலையில் புகைப்படங்களுடன் பார்த்தது மிகவும் வேதனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் பாராட்டும் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அய்யா! கருத்துரைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  10. மனது வலிக்கும் ஒரு கட்டுரை. இது வரை நான் அறிந்ததில்லை இந்த நிகழ்வை, அறியத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே, அறியாத நிகழ்வை அறிந்து, வருகை புரிந்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. மிகப் பெரிய கொடுமைதான் நண்பரே!
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  12. ஜப்பான் நாட்டில் மட்டுமல்ல உலகில் எல்லா நாட்டிலும் பெண்கள் போரால் துன்பத்திற்கு உள்ளாகுகின்றனர். இந்திய ராணுவத்தால் இலங்கயிலும் வடக்கு மாநிலங்களிலும் நடந்ததும் இதுவே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜோஸ்பின்,
      முதல் முறையாக எனது வலைபதிவுக்கு வந்து கருத்துரையிட்ட தங்களுக்கு நன்றி!
      உண்மைதான் சகோ, எல்லா போர்களிலும் பெண்கள்தான் பகடைக்காயாக மாறுகிறார்கள். ஈழத் தமிழ் பெண்களைப் பற்றியும் எழுதிள்ளேன். விரைவில் பதிவிடுகிறேன்.
      வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  13. வணக்கம் தோழர். நானும் இன்றுதான் உங்கள் வலையை பார்க்கிறேன். மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொடர்ந்து உரையாடுவோம் தோழர். உங்களது வலையை எனது முகப்பில் இணைக்கிறேன். உடனுக்குடன் வாசிக்க வசதியாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தோழரே,
      தங்களின் முதல் வருகைக்கு நன்றி. வலைதளத்தை இணைத்தமைக்கும் இணைந்தமைக்கும் நன்றி.
      தொடர்ந்து உரையாடுவோம். மகிழ்ச்சி!

      நீக்கு
  14. நண்பரே,

    ஜப்பானியர்கள் பற்றி இங்குள்ளவர்கள் அவர்கள் பெரிய கருணை மனம் படைத்தவர்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் அதிகம் குரூரம், வெறுப்பு கொண்டவர்கள். புதியவர்களை சற்றும் நட்புடன் வரவேற்காத உள்ளம் அவர்களது. சில விதி விலக்குகள் இருக்கலாம்.

    இது போன்ற நிகழ்வுகள் போர் சமயங்களில் நடப்பதுதான். ஆனால் அமெரிக்கன் செய்தால் அதை கூட்டம் போட்டு, மாநாடு நடத்தி, பதிவுகள் எழுதி தங்கள் சிவப்பை தெரிவிக்கும் பலர் ஜப்பான் என்றால் அமைதியாகிவிடுவார்கள்.

    பதிவு எழுதியதற்கு பாராட்டுக்கள். நிறைய புதிய சங்கதிகள் உங்கள் தளத்தில் வருவது ஒரு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே,
      உண்மைதான். ஆங்கிலேயர் ஆட்சியிலும், ஜப்பானியர்களின் ஆதிக்க வெறியிலும் நடந்த பல நிகழ்வுகள் வெளியுலகுக்கு தெரியவில்லை என்பது உண்மை. ஆனால், அமெரிக்கா என்றால் மல்லுக்கு நிற்கிறார்கள். அதற்கு நீங்கள் சொன்ன சிவப்பும் காரணமாக இருக்கலாம்.
      கருத்துக்கும் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  15. நண்பரே,

    இன்னொரு விஷயம் விட்டுப் போய்விட்டது. கற்பழிப்பு என்ற வார்த்தைப் பதத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். அது ஒரு ஆணாதிக்க திமிர். வன்புணர்வு என்பது பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து பழக்கத்தில் அப்படி வந்து விடுகிறது. நான் எழுதுவது எளிய மக்கள் படிக்கும் பத்திரிகைகளில், வன்புணர்வு என்பது இலக்கிய வார்த்தை. அதை சாதாரண மக்கள் புரிந்து கொள்வார்களா என்பதில் ஆசிரியர் குழுவுக்கே சந்தேகம் இருக்கிறது. பாலியல் பலாத்காரம் என்ற வார்த்தை கூட சமீபத்தில்தான் கொஞ்சம் புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். இன்னமும் கிராமங்களில் வன்புணர்வு என்றால் தெரியாமல் தான் விழிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் அப்படி எழுதப்படுகிறதே தவிர ஆணாதிக்க திமிரால் அல்ல. ஆனாலும் தங்களின் ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறேன். வரும் பதிவுகளில் திருத்திக் கொள்கிறேன்.
      நன்றி நண்பரே!

      நீக்கு
  16. நண்பர் காரிகனின் கருத்தை நானும் வழி மொழிகிறேன்

    பதிலளிநீக்கு
  17. இந்தியாவுக்கு உழைத்த பெண்கள் விபரங்கள் அதில் இடம்பெறவில்லையெ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவில் கம்போர்ட் பெண்களைப் பற்றிதான் சொல்லியிருக்கிறேன். இதில் இந்தியப் பெண்கள் எங்கு வந்தார்கள் நண்பரே!

      நீக்கு
  18. இதை எப்படித் தவறவிட்டேன்..?!!

    வலியுன் குரல்.

    த ம 13.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே!
      தங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  19. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் நியாயம் கிடைத்திருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்திட்டு வரும் தங்களுக்கு மிக்க நன்றி. தொடருங்கள்!

      நீக்கு
  20. கற்பழிப்பு என்றுதான் பதிவிடுங்களேன். அது தானே மிகச் சரியான சொல்லும் கூட. அதை விட்டு வன் புணர்வு பன்னு புனர்வுன்னிட்டு. காலங்காலமாக புழங்கிவரும் சொல்தான் கற்பழிப்பு. மென்டல் பெண்ணியவாதிகள் தான் புதுசு புதுசாக அறிவுக்கு பொருந்தாத சொற்களைக் கண்டுபிடிப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  21. ஜப்பான்னா தொழில்துறை முன்னேற்றம், சுத்தம், சுறுசுறுப்புன்னு மட்டும்தான் படிச்சிருக்கோம். போர்க்காலத்தில இப்படி ஒரு கொடுமை பெண்களுக்கு நடந்திருக்குன்னு படிச்சபோது அதிர்ச்சியா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை