Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

விரதம் தரும் வலிமை


விரதம் இருப்பதால் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.  விரதம் என்பது உணவை கைவிடுதல் என்று சொல்லப்படுகிறது. உலகில் பெரும்பாலான மதத்தினர் மதத்தின் காரணமாக விரதம் இருக்கிறார்கள். இதில் பெரிய அளவில் தொடர்ச்சியாக விரதம் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள்தான். இந்துக்களும் ஏராளமான விரதங்கள் இருக்கிறார்கள். உலகில் மொத்தம் 27 வகையான விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதங்கள் தரும் வலிமை வியப்பளிப்பதாக இருக்கிறது. மகாத்மா காந்தியின் மனவலிமைக்கு அவரது உண்ணாவிரதங்கள்தான் காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.  


உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது ஒருவகை இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிக்கமுடியும். தேன் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், பசுவின் பாலை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல், காலை நேரம் மட்டும் உணவருந்தி விரதம் இருத்தல். பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல்.

மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு விரதம் இருத்தல். ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். 


ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருத்தல். தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி விரதம் இருத்தல். ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி விரதம் இருத்தல்.

ஒரு நாள் முழுவதும் அத்த இளந்தளிர்களையும், நீரையும் மட்டும் அருந்தி விரதம் இருத்தல். இரு வேளை உணவுடன் விரதம் இருத்தல். முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் விரதம் இருத்தல். மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு விரதம் இருத்தல். வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் விரதம் இருத்தல் என்று ஏகப்பட்ட விரதங்கள் இருக்கின்றன. 


இந்த விரத விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த விரதங்களையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்த விரத முறையாக ஆய்வுகள் சொல்கின்றன. 

விரதம் இருப்பதால் உடற்கழிவுகள் வெளியேறுகின்றன. அதோடு நின்றுவிடாமல் மனச்சிதைவு நோய்க்கு விரதம் நல்ல மருந்து என்று ரஷ்ய ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இருட்டைக் கண்டும், கூட்டத்தைக் கண்டும் பயபடுபவர்கள் கூட விரதம் இருந்தால் தைரியம் பெற்றுவிடுகிறார்கள்.  


வரலாற்றில் கூட அடிமைகளைப் பட்டினிப்போட்டு வதைத்தபோது அவர்கள் வீறுகொண்டு எழுந்து சுதந்திரம் பெற்றது பட்டினியின் வலிமையால்தான் என்கிறது அந்த ஆய்வு. 

மேலும் விரதம் எதிர்ப்பாற்றலைக் கூட்டுகிறது. நரம்பு மண்டலத்திலும் மூளையிலும் உள்ள நச்சுகளை வெளியேற்றி மாற்றத்தைக் கொண்டு வருகிறது, புத்திக் கூர்மையாகிறது. திசுக்கள் தீவிரமாக தம்மை புதுப்பித்துக் கொள்கின்றன. விரதத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்யும்போது கூடுதலாக ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன என்று மேலும் அந்த ஆய்வு சொல்கிறது. இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தின் மீது மிதமிஞ்சிய பற்றுதலோடு இருப்பதற்கு அவர்கள் வருடந்தோறும் ஒரு மாதம் முழுவதும் தவறாமல் இருக்கும் ரம்ஜான் நோன்பு என்ற விரதம்தான் காரணம் என்கிறது.


இன்றைய தலைமுறைக்கு பசி என்ற உணர்வே ஏற்படுவதில்லை. தொடர்ந்து நொறுக்குத்தீனி சாப்பிட்டுக்கொண்டே இருப்பதால் அவர்களுக்கு  பசி என்ற உணர்வே தோன்றுவதில்லை. இவர்கள் வாரத்தில் ஒருநாள் வயிற்றைப் பட்டினிப்போட்டு விரதம் இருந்தால் உடல்நலம், மனநலம் மற்றும் மனத்துணிவு கிடைக்கும். அதனால் விரதம் இருப்போம். 



10 கருத்துகள்

  1. விரதங்கள் குறித்த ஆச்சர்யமூட்டும் தகவல்கள்! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

    பதிலளிநீக்கு
  3. வியப்பு தரும் செய்திகள் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  4. விரதம் பற்றி வியத்தகு தகவல்கள்... நன்றி செந்தில்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை